எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பஞ்ச பூதங்களாலேயே உலகம் இயங்குகிறது. இந்த பஞ்சபூதங்களை இயக்கும் மஹா மந்திரம் நமசிவாய எனும் ஸ்ரீ சிவபஞ்சாட்சர மஹா மந்திரம். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து இறையருள் தொழில்களை தமது நமசிவாய என்ற பஞ்சாட்சர தாரக மந்திரத்தின் மூலம் நவக்கோள்களையும், நட்சத்திரங்களையும் காலச்சக்கரத்தின் நியதிப்படி நடத்தி வருபவரே ஆதிசிவன், இவரே அனைத்து ஐஸ்வர்யங்களையும் உலக மக்களுக்கு வழங்குகிறார். எனவே உலக நன்மைக்காக அனைவரும் நவக்கோள்களில் நன்மை பெற்று சகல ஐஸ்வரியமும், ஸ்ரீ லட்சுமி கடாட்சமும், ஸ்ரீ சிவ கடாட்சமும் பெற்று நலமுடன் வாழ சித்ரா பௌர்ணமி அன்று (இன்று) ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் வாயுலிங்கம் அருகே உள்ள நமசிவாய ஆசிரம அன்னதான தருமசாலையில் ஸ்ரீ சிவபஞ்சாட்சர மஹா வில்வயாகம் மற்றும் மஹா சுதர்சன யாகம் நடைபெற உள்ளது.
வில்வம் சிவனுக்கு மிகவும் விருப்பமானது. வில்வ இலைகளில் மகாலட்சுமி எழுந்தருளியிருக்கிறாள். சிவனே கிரியாக விளங்கும் அண்ணாமலையில் செய்யும் ஸ்ரீ சிவபஞ்சாட்சர மஹாவில்வ யாகம் சிவகடாட்சத்தையும், லஷ்மி கடாட்சத்தையும், மஹா விஷ்ணுவின் அருளினையும் தரும். வில்வத்தில் லட்சுமி வாசம் செய்கிறார். ஒரு வில்வத்தளம் (இலை) லட்சம் ஸ்வர்ண புஷ்பத்திற்கு சமம், ஒரு வில்வத்தளத்தை (இலை) சிவனுக்கு அர்பணித்தால் மகா பாவங்கள் எல்லாம் விலகி சகல சவுபாக்கியங்களும், நவகிரகங்களால் நற்பலன்களும் உண்டாகும். வில்வ இலை மூன்று இலைகளாக காட்சியளிப்பதால் அதற்கு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி என்று மூன்று வகை சக்திகளாக வில்வ இலை பாவிக்கப்பட்டு யாக பூஜையில் சிவனுக்கு (இறைவன்) சமர்ப்பணம் செய்யப்படுகிறது.
காசியிலும், இராமேஸ்வரத்திலும் சிவதரிசனம் செய்த புண்ணியம் சித்ரா பௌர்ணமியன்று செய்யும் ஸ்ரீ சிவபஞ்சாட்சர மஹா வில்வ யாகத்தின் மூலம் கிடைக்கும். மேலும் அசுவமேத யாகம் செய்த பலனும் லட்சம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியமும் நவக்கிரகங்களின் நன்மையும் கிடைக்கும். மஹா விஷ்ணுவின் மஹா சுதர்சன யாகம் உடல் பலத்தையும், மன பலத்தையும் காத்து லட்சுமி கடாட்சமும், குபேர சம்பத்தும் அளிக்கும். ஐஸ்வர்யம் அபிவிருத்தி அடையச் செய்வதே ஸ்ரீ மஹா சுதர்சன யாக பூஜை. மஹா விஷ்ணுவின் சுதர்சன யாக பூஜை, சித்ரா பௌர்ணமி அன்று செய்வதால் மகிழ்ச்சி மட்டுமல்லாமல், செல்வமும் சேரும், புகழ் கிடைக்கும். கல்வி மேன்மை பெரும், கடன் அடைபடும், பொருளாதார சிக்கல் தீரும், சத்ரு பயம் நீங்கி சத்ரு நிவர்த்தி உண்டாகும். நோய்கள் குணமடையும், சகல வெற்றியும் உண்டாகும்.
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிவபஞ்சாட்சர மஹா வில்வயாகத்தை தொடர்ந்து அஷ்டத்திக்கு பாலகர்களின் அஷ்டலிங்க மஹாயாகம் நடைபெறும். கோச்சார முறையில் சஞ்சரிக்கும் ஒரு கிரகம் சுப பலன்களை தரக்கூடியதாக இருந்த போதிலும் அச்சமயத்தில் அக்கிரகத்தினால் எவ்வித பலனுமில்லை என்ற நிலை ஏற்பட்டால், கிரகம் நின்ற அஷ்டதிக்கு பாலகர் எவரோ அவரை வழிபட சுப பலன்கள் ஏற்படுவது மட்டுமல்லாமல் அசுப கிரகங்களினால் ஏற்படும் தீய பலன்களை அகற்றி சகல நன்மைகளும் உண்டாகும்.
பசிக்கு உணவளிப்பதால் வரும் பலன்கள் பற்றி வள்ளல் ராமலிங்க பெருமான் கூறுகையில். குழந்தையில்லாது வருந்துகின்ற அன்பர்கள் தங்கள் தரத்திற்கு ஏற்றபடி பசித்தவர்கட்கு பசியாற்றுவதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்த சீவகாருண்ய அணுசரிப்பே அழகும், அறிவும் உடைய சந்ததியை உண்டு பண்ணும் என்பது உண்மை. தீராத வியாதியினால் வருந்துகின்ற அன்பர்கள் பசித்த சீவர்கட்கு பசியாற்றுவதையே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்த சீவகாருண்ய அனுசரிப்பே தீராத வியாதிகளைத் தீர்க்கும் என்பது உண்மை. அற்ப வயதென்று குறிப்பினால் அறிந்து கொண்டு இறந்து போவதற்கு அஞ்சி விசாரப்படுகின்ற அன்பர்கள், பசித்தவர்கட்கு பசியாற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்த சீவகாருண்ய அனுசரிப்பே தீர்க்காயுளை உண்டு பண்ணும் என்பது உண்மை. கல்வி போகம், செல்வம் இவைகளில்லாது வருந்துகின்ற அன்பர்கள், பசித்த சீவர்கட்கு பசியாற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்த சீவகாருண்ய அனுசரிப்பே, கல்வி, செல்வம், போகம் முதலியவைகளை உண்டுபண்ணும் என்பது உண்மையென்று விளக்குகிறார் வள்ளல் பெருமானார்.
வாழ்வில் சிறப்பு சேர்க்கும் சித்ரா பவுர்ணமி : சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரம் இணைந்த நாளில் வரும் பவுர்ணமி தினம், புராண நிகழ்வுகளின் நினைவாக சிறப்பைப் பெறுகிறது. மற்ற பவுர்ணமிகளில் சிறு களங்கத்துடன் தோன்றும் சந்திரன், சித்திரா பவுர்ணமியன்று, பூரணக் கலைகளுடன் பூமிக்கு மிக அருகில் தோன்றும். சந்திரனும், சூரியனும் முழு நீசம் பெற்ற இந்த நாளில், நாம் தெய்வங்களிடம் சரணடைந்து வழிபடுவது நன்மைகளைத் தரும் என்பது ஐதீகம்.
சித்திரகுப்தனை வழிபடும் நாள்: மனிதர்களின் பாவ புண்ணியங்களை எழுதி வைத்து அதற்கேற்றார் போல், அவர்களின் இறப்பையும் அதன்பின் அவர்கள் வசிக்கப் போகும் சொர்க்கம் - நரகம் ஆகியவற்றை நிர்ணயிக்கும் பெரிய பொறுப்பில் உள்ள எம தர்மனின் உதவியாளரான சித்திரகுப்தனை வழிபடும் நாள்தான் இந்நாள். சித்ரகுப்தனின் பிறப்புக் குறித்து பல்வேறு புராண சம்பவங்கள் விவரிக்கப்பட்டாலும் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிகழ்வாக இக்கதையே பெரும்பாலும் உள்ளது.
கயிலாயத்தில் ஒருநாள் அன்னை பார்வதி தேவி, பொழுதுபோக்காக ஒரு அழகிய ஆண் குழந்தையின் வடிவத்தை சித்திரமாக வரைந்து மகிழ்ந்தாள். அதே நேரத்தில் எல்லாம் வல்ல ஈசனிடம், விதி முடிந்த மனிதரின் உயிரைப் பறித்து பூமி மாதாவின் பாரத்தைக் குறைக்கும் பணியில் உள்ள எமதர்மன், அதிக வேலைப் பளு காரணமாகத் தான் அவதிப்படுவதாகவும், தனக்கு ஏற்ற சிறந்த உதவியாளரைத் தரும் படியும் வேண்டினான்.
அப்போது தான் ஈசனிடம் தான் வரைந்த ஓவியத்தைக் காட்டினாள் அன்னை உமாதேவி. அழகில் சிறந்த அந்த ஆண் குழந்தையின் ஓவியம், ஈசனின் மனதை மயக்கியது. அந்நேரம் எமனின் வேண்டுகோள் நினைவில் தோன்ற, அவ்வோவியத்தைக் கையில் எடுத்த இறைவன் தன் மூச்சுக் காற்றை அவ்வோவியத்தில் செலுத்த, ஓவியத்தில் இருந்த குழந்தை உயிர் பெற்று வந்தது. சிவசக்தியின் அம்சமாக உருவான அக்குழந்தை சித்திரத்தில் இருந்து உயிர் பெற்றதால் ‘சித்ர குப்தன்’ எனப்பெயர் பெற்று ஈசனை வேண்டித் தவமிருந்து பல ஞானங்களைப் பெற்று வளர்ந்தது.
கல்வி வேள்விகளில் சிறந்தவன் ஆன சித்ரகுப்தனை தகுந்த வயதில் எமதர்மனிடம் அனுப்பி, மனிதர்களின் பாவப்புண்ணிய கணக்குகளை நெறி தவறாமல் எழுதி, எமனுக்கு உதவி செய்யும்படி பணித்தார் சிவபெருமான் என்கிறது புராணம்.
‘சித்’ என்றால் ‘மனம்’ என்றும், ‘குப்த’ என்றால் ‘மறைவு’ என்றும் பொருள். மனிதர்களின் மனதில் மறைந்திருக்கும் பாவ எண்ணங்களையும் மனதார செய்யும் நல்ல செயல்களின் புண்ணியத்தையும் கவனித்து எழுதி வைக்கிறார் சித்ரகுப்தர் என்பது நம்பிக்கை.
மனிதரின் பாவ புண்ணியக் கணக்குகளை எழுதும் பணிக்காக இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட சித்திரகுப்தன், பிறக்கும்போதே கையில் எழுத்தாணி ஏடுடன் பிறந்ததாக ஐதீகம். நாம் செய்யும் புண்ணிய செயல்களையும் பாவ செய்களையும் தவறாமல் நடுநிலையாக, அவரவரின் பூர்வ புண்ணியங்களின் படி ஆராய்ந்து மறையாத எழுத்துக்களால் கணக்குப் புத்தகத்தில் எழுதுவதாக நம்பிக்கை. ஆகவேதான் அன்று சித்திரகுப்த பூஜையில் எழுத்தாணி மற்றும் கணக்கு நோட்டுப் புத்தகங்கள் வைத்து வாழ்வு வளம் பெற வேண்டுகின்றனர்.
சித்திரா பவுர்ணமியன்று பூஜையறையை சுத்தம் செய்து, சித்ரகுப்தன் படத்தை தெற்கு திசையில் வைத்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும். பின்னர் சந்தனப் பொட்டு வைத்து பழங்கள், காய்கறிகள், வேப்பம்பூ பச்சடி, பச்சரிசி வெல்லத்துடன் இனிப்புகள் மற்றும் கலவை சாதங்களை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும். ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி மனதில் உள்ள தீய எண்ணங்களை விலக்கி நல்ல எண்ணங்களை புகுத்தி தீப தூபம் காட்டி சித்ரகுப்தனை மனதார வழிபட வேண்டும்.
சித்ரா பவுர்ணமியன்று களங்கமில்லாத முழு நிலவின் அழகைக் கண்டு ரசிக்க, கடற்கரை பூங்கா போன்ற இடங்களில் மக்கள் ஒன்று கூடுவார்கள் அவரவர் வீடுகளில் செய்த ‘சித்ரா அன்னம்’ எனப்படும் கலவை சாதங்களை எடுத்து வந்து, நிலாச்சோறு உண்ணும் வழக்கம் குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமையையும் அன்பையும் பெருக வைக்கும் என்பதால் நம் பெரியோர்கள் கடைப்பிடித்த நல்வழி இது.
சித்ரா பவுர்ணமியின் சிறப்புகளாக பல ஆன்மிக வழிபாடுகளும் பூஜைகளும் ஆலயங்கள் தோறும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மதுரையில் அன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு தரிசனம் தருவது ஆண்டுதோறும் நிகழும் சிறப்புமிக்க வைபவமாகிறது. கன்னியாகுமரியில் அன்று மட்டும் ஒரே நேரத்தில் சூரியன் மறைவதையும் சந்திரன் தோன்றுவதையும் கண்டு மகிழலாம். திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் நிகழ்வு பிரசித்தி பெற்றதாக இருக்கிறது.
இந்த தினத்தில் சித்ரகுப்தனை வேண்டி வருட பலாபலன்களை அறிந்து கொள்ளும் பஞ்சாங்கம் படிப்பதும், கடல் நீரில் நீராடுவதும் வாழ்வில் சுபீட்சத்தை அருளும். அன்றைய தினம் சித்ராதேவிக்கு (அம்பிகை) தேங்காய் சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர்சாதம், பருப்புப் பொடி சாதம், கறிவேப்பிலைப் பொடி சாதம், மாங்காய் சாதம், வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், அரிசி உப்புமா, அவல் உப்புமா, கோதுமை உப்புமா ஆகியவைகளைப் படைத்து அவற்றை பசித்தோருக்கு தானமாகத் தந்து புண்ணியம் பெறலாம்.
சித்ரா பௌர்ணமி அன்று செய்யும் அன்னதானத்தால் கிடைக்கும் பலன்கள் வருமாறு:
•அன்னதானம் அளிப்பவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கிறது.
•அன்னாரது குடும்பத்தின் அங்கத்தினர்களுக்கும் நீண்ட ஆயுள் கிடைக்கிறது.
•அன்னதானம் செய்பவருடைய மன வருத்தங்கள் குறைந்து சந்தோஷம் உண்டாகும்.
•அன்னதானம் செய்பவருடைய குடும்ப வாரிசுகள் அன்னாரது அறிவுத்திறன் வளர்ச்சியடையும்.
•அன்னதானம் செய்பவர் மிகுந்த பிரபலம் அடைவர்.
•அன்னதானம் செய்பவருக்கும், அன்னாரது குடும்பத்தைச் சார்ந்தவருக்கும் உடல்பலம் ஆத்மபலம் விருத்தியாகும்.
•அன்னதானம் செய்பவருக்கு அரசியல் வாழ்க்கையில் உயர்வு உண்டாகும்.
தொகுப்பு: அர்ச்சகர் சுப்பிரமணி, சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் கோவில்.
தொகுப்பு: ஜஸ்டின்,
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி18 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 17 hours ago |
ரவா பர்பி1 week 19 hours ago |
-
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது : 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
ஜாஸ் பட்லர் அதிரடி சதம்: ராஜஸ்தான் அணி வெற்றி
17 Apr 2024ஜெய்பூர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி வாகை சூடியது.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.