முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சி மண்டலம் 1 அலுவலகத்தில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

செவ்வாய்க்கிழமை, 8 மே 2018      மதுரை
Image Unavailable

மதுரை, -    மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.1 அலுவலகத்தில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் துணை ஆணையாளர்  .ப.மணிவண்ணன்   தலைமையில்  நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.1 அலுவலகத்தில் காலை  10.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்ற சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் குடிநீர், பாதாள சாக்கடை, சாலை வசதி, வீட்டு வரி, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 24 மனுக்கள் பொது மக்களிடமிருந்து துணை ஆணையாளர் அவர்களால் நேரடியாக பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்;.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர்  .அரசு, உதவி செயற்பொறியாளர்  முருகேசபாண்டியன், உதவி செயற்பொறியாளர் (தெருவிளக்கு)  .செந்தில், சுகாதார அலுவலர்  .விஜயகுமார் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து