முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.எஸ்.இ.க்கு டெண்டுல்கர் பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 8 மே 2018      விளையாட்டு
Image Unavailable

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு புதிய விளையாட்டு வழிமுறைகள் கொள்கைகள் வகுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு நாள்தோறும் விளையாட்டு பாட வேளைகள் கட்டயாம் ஆக்கப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ. யின் இந்த நடவடிக்கையை சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். இது குறித்து சி.பி.எஸ்.இ. தலைவர் அனிதா கர்வாலுக்கு சச்சின் டெண்டுல்கர் எழுதியுள்ள கடிதத்தில்,, “ இந்திய மாணவ, மாணவியரின் வாழ்க்கை முறையால் பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், உடல் பருமனால் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு ஆரோக்கியம் இல்லாத நிலையில் உள்ளனர்.இதனால், விளையாட்டில் ஆர்வம் உள்ள பல இளம் தலைமுறையினரை உருவாக்க வேண்டும். விளையாட்டு உடல் வலிமையை மட்டும் உருவாக்குவதில்லை. மன வலிமை மற்றும் ஒழுக்கத்தையும் விளையாட்டு கட்டமைக்கிறது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து