முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 14-ம் தேதி நடை திறப்பு

வியாழக்கிழமை, 10 மே 2018      தமிழகம்
Image Unavailable

பம்பை: சபரிமலை ஐயப்பன் கோயில் வைகாசி மாத பூஜைகளுக்காக வரும் 14-ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது.

வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை 14-ம் தேதி காலை 5.00 மணிக்கு திறக்கிறது. அன்றைய தினம் வேறு எந்த பூஜைகளும் கிடையாது. இரவு 10.00 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, 15-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறந்ததும் நிர்மாலய தரிசனமும், அதைத் தொடர்ந்து அபிஷேகமும் நடைபெறும்.

தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார். 19-ம் தேதி வரை வழக்கமான பூஜைகளுடன் உதயாஸ்மனபூஜை, சகஸ்ரகலசம் போன்றவை நடைபெறும் இரவு 7.00 மணிக்கு படிபூஜை நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து