முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியார் பேருந்து நிலையத்தில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் உயர்த்தி கட்டும் பணி ஆணையாளர் அனீஷ் சேகர் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 11 மே 2018      மதுரை
Image Unavailable

 மதுரை,-மதுரை மாநகராட்சி பெரியார் பேருந்து நிலையம் பகுதிகளில் மழைநீர் வடிகால் உயர்த்தி கட்டும் பணியினை ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்.   ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 பெரியார் பேருந்து நிலையம் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்கும் வகையில் ஏற்கனவே உள்ள மழைநீர் வாய்க்காலை உயர்த்தி கட்டுவதற்காக ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளை ஆணையாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் பணிகளை விரைவில் முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
 இந்த ஆய்வின் போது உதவி ஆணையாளர்  கௌசலாம்பிகை, செயற் பொறியாளர்  சேகர், உதவி செயற் பொறியாளர்  .ஆரோக்கிய சேவியர், உதவிப் பொறியாளர் .துர்காதேவி, சுகாதார அலுவலர் ராஜ் கண்ணன், உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து