முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக ஆளுநர் .பன்வாரிலால் புரோகித் விருதுநகரில் “தூய்மையே சேவை” விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 11 மே 2018      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர், - விருதுநகர் நகராட்சி தேசபந்து மைதானத்தில்  தூய்மைபாரத இயக்கத்தின் கீழ் ‘முழு சுகாதார  தமிழகம் முன்னோடி தமிழகம்”;  என்ற உறுதிமொழியை மாண்புமிகு தமிழக  ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் அவர்கள் வாசிக்க, ஆளுநரின்; கூடுதல் தலைமைச் செயலாளர், மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,  பொதுமக்கள்,  செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவியர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், சுகாதார தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள், மகளிர் சுய உதவிக் குழவினர், அனைத்து துறை அலுவலர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். மேலும் உணவு பாதுகாப்புத்துறையின் மூலமாக அமைக்கப்பட்டிருந்த காட்சி அரங்கினை திறந்து வைத்து, பார்வையிட்டார்கள். 
அதனைத்தொடர்ந்து, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் பாவாலி ஊராட்சி, சந்திரகிரிபுரம் கிராமத்தில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் “தூய்மையே சேவை” சுகாதார  விழிப்புணர்வு வாகனத்தையும், தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு பேரணியையும் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், தோட்டக்கலைத்துறை  சார்பில் வைக்கப்பட்டிருந்த காட்சி அரங்கு, வேளாண்மைத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த காட்சி அரங்கு, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த காட்சி அரங்கு, ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுவினரின்  உற்பத்திப் பொருட்கள் கண்காட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் வைக்கப்பட்;டிருந்த புகைப்படக்கண்காட்சி ஆகியவற்றை மாண்புமிகு தமிழக  ஆளுநர் அவர்கள் பார்வையிட்டார்.
 முன்னதாக, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அரசு விருந்தினர் மாளிகையில் பொதுமக்களிடம் 283 மனுக்களை மாண்புமிகு தமிழக ஆளுநர்  பெற்றுக்கொண்டார். பின்னர் பல்வேறு துறை அலுவலர்களுடன்; ஆலோசனை நடத்தினார்.
 இந்நிகழ்வின்போது, ஆளுநர்   கூடுதல் தலைமைச் செயலாளர்  ஆர்.ராஜகோபால் மாவட்ட ஆட்சித்தலைவர்  .அ.சிவஞானம்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  .ராசராசன்,   மாவட்ட வருவாய் அலுவலர்  .இ.ஆனந்தகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  சு.சுரேஷ், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர்  .தெய்வேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) .செந்தில்குமாரி மற்றும் அனைத்துறை அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து