எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம்: கோதாவரி, காவிரியை இணைக்கின்ற மிகப் பெரிய திட்டத்தை நாங்கள் உருவாக்க இருக்கின்றோம். இதன் மூலம் தமிழகத்திற்கு தெலுங்கானா - ஆந்திரா வழியாக 125 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும் என்று முதல்வர் எடப்பாடி பேசினார்.
சேலம் ஏ.வி.ஆர்.ரவுண்டானாவில் இருந்து குரங்குசாவடி வரை ரூ.82.27 கோடி மதி்ப்பில் கட்டப்பட்ட புதிய பால திறப்பு விழா, ஆட்டையாம்பட்டி - மொசக்காளிப்பட்டியில் புதிய பால திறப்பு விழா, சேலம் மாவட்டம் ஆத்தூர் காவல் நிலையம் மற்றும் தாரமங்கலத்தில் புதிய புறவழிச்சாலைக்கு அடிக்கல், சேலம் மணல்மேடு மேம்பால பணிக்கு அடிக்கல் நாட்டு விழா ஆகிய விழாக்கள் ஏ.வி.ஆர்.ரவுண்டானா அருகில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு சேலம் மாவட்ட கலெக்டர் ரோஹிணி பாஜிபாகரே வரவேற்று பேசினார். சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் வி.பன்னீர் செல்வம்,சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளரும்,சேலம் மேற்கு தொகுதி எம்.எல்..வுமான ஜி.வெங்கடாஜலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவிற்கு தலைமை தாங்கி பாலங்கள் மற்றும் காவல் நிலையத்தை திறந்து வைத்தும்,புதிய சாலை மற்றும் உயர்மட்ட பாலத்திற்கு அடிக்கல் நாட்டியும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது,
இன்றைக்கு நீரினுடைய அவசியம் மிக முக்கியம். எல்லா நதிகளுமே பக்கத்து மாநிலத்திலிருந்து உற்பத்தியாகித்தான் நம்முடைய மாநிலத்திற்கு வருகிறது. காவிரி கர்நாடகத்தில் உற்பத்தியாகிறது, முல்லைப் பெரியாறு கேரளாவில் உற்பத்தியாகிறது, பாலாறு ஆந்திராவிலிருந்து உற்பத்தியாகிறது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்பதற்காக மத்திய அரசிடம் நான் வலியுறுத்திச் சொன்னேன். மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, சென்னைக்கு வருகை தந்த பொழுது என்னிடத்தில் சொன்னார், நீங்கள் கடிதம் எழுதினீர்கள், பாரத பிரதமரிடத்திலும் கோரிக்கை வைத்தீர்கள். இன்றைக்கு கோதாவரி, காவிரியை இணைக்கின்ற மிகப் பெரிய திட்டத்தை நாங்கள் உருவாக்க இருக்கின்றோம், ஆகவே, கோதாவரியில் அதிக நீர் வருகின்றது. அந்த நீரை தெலுங்கானா, ஆந்திரா வழியாக நம்முடைய பகுதியாகிய மாயனூர் கேரேஜ் என்னும் இடத்தில் அந்த தண்ணீரை கொண்டு வந்து இணைக்க வேண்டும். அப்படி கோதாவரி தண்ணீர் 125 டி.எம்.சி. நமக்கு கொடுப்பதாக மத்திய அரசால் திட்டம் தீட்டப்படுகிறது. இதன் மூலம் அந்த பகுதி மக்களுக்கு நிலையான நீர் கிடைக்கும். மேட்டூர் அணையில் இருக்கும் அந்த நீர் சேலம் மாவட்டம், நாமக்கல் மாவட்டம் மற்றும் திருச்சி மாவட்டம் வரை கால்வாய் வெட்டி அதன் மூலமாக ஆங்காங்கு இருக்கின்ற ஏரிகளை நிரப்புகின்ற பொழுது மூன்று மாவட்டங்களில் இருக்கின்ற விவசாயிகள் பயனடைவார்கள்.
இந்தியாவிலேயே வேளாண் துறை, மருத்துவத் துறை, அனைத்துத் துறைகளிலும் முதன்மையாக விளங்கக்கூடிய நிலை தமிழகத்திலே பார்க்க முடிகின்றது. கல்வித் துறையில் இந்தியாவிலேயே உயர்கல்வி படிக்கின்ற மாணவர்களுடைய எண்ணிக்கை தமிழகம் தான் முன்னிலை வகிக்கின்றது. சாலை போக்குவரத்திலும் தமிழகத்தில்தான் சாலை சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது என்று மத்திய அரசே கூறியிருக்கிறது. அந்த அளவிற்கு அம்மாவினுடைய அரசு எல்லா துறைகளிலும் வளர்ச்சியை காண்பதற்கு திட்டங்களை தீட்டியிருக்கிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இந்த விழாவில் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர்.பி.ஆர்.சுந்தரம், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.காமராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் மேட்டூர் செ.செம்மலை, சேலம் தெற்கு ஏ.பி.சக்திவேல், ஆத்தூர் சின்னதம்பி, கெங்கவல்லி மருதமுத்து, ஓமலூர் வெற்றிவேல், சங்ககிரி ராஜா, ஏற்காடு சித்ரா, மாநில மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன், சேலம் ஆவின் சேர்மன் சின்னதம்பி, முன்னாள் எம்.எல்.ஏ.எம்.கே.செல்வராஜ், முன்னாள்மேயர் எஸ்.சவுண்டப்பன், முன்னாள் துணை மேயர் எம்.நடேசன், சேலம் மாநகர் மாவட்ட பகுதி கழக செயலாளர்கள் தியாகராஜன், சரவணன், யாதவமூர்த்தி, சண்முகம், ஜெயலலிதா பேரவை செயலாளர் சரவணமணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் பராமரிப்புத்துறை அதிகாரி நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்