முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரபிக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: அரபிக் கடல் பகுதியில் நாளை 15-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது:
மத்திய அரபிக் கடல் பகுதியில் நாளை 15-ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக வாய்ப்புள்ளது. அது ஏமன் நாட்டை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்பகுதி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதியின் தாக்கத்தால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து அடுத்து வரும் நாட்களில் தான் தெரியவரும்.

தற்போது உள்ள வானிலை நிலவரப்படி, வெப்பச் சலனம் காரணமாக அடுத்து வரும் 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இதற்கிடையே, நேற்று முன்தினம் காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, புதுக்கோட்டை, வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், திருப்பூர் மாவட்டம் தாராபுரம், விருதுநகர் மாவட்டம் கோவிலங்குளம், அருப்புக்கோட்டை, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஆகிய நகரங்களில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவின்படி அதிகபட்சமாக வேலூரில் 105.62, திருத்தணியில் 105.26, கரூர் பரமத்தியில் 101.48, சென்னை விமான நிலையத்தில் 100.94, திருச்சியில் 100.76 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இவ்வாறு எஸ்.பாலசந்திரன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து