முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

20 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு

திங்கட்கிழமை, 14 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையில் 20 நாட்களுக்கு பிறகு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 18 காசுகளும், டீசல் ஒரு லிட்டர் 23 காசுகளும் உயர்த்தப்பட்டு விற்பனையானது.

கர்நாடக தேர்தல்...

பெட்ரோல், டீசல் விலையை தினசரி அறிவிக்கும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இதையடுத்து, ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு, அன்றைய தினம் நள்ளிரவு 12 மணி வரை நடைமுறையில் இருக்கும். இந்த சூழலில், கடந்த  20 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதாலே, எண்ணைய் நிறுவனங்கள் விலையை மாற்றியமைக்கவில்லை என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால், இந்த கூற்றை எண்ணைய் நிறுவனங்கள் மறுத்தன.

விலையில் மாற்றம்

இந்த நிலையில், 20 நாட்களுக்கு பிறகு நேற்று பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் கண்டுள்ளன. ஒரு லிட்டர் பெட்ரோல், 77 ரூபாய் 43 காசுகளாக இருந்த நிலையில், 18 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. உயர்த்தப்பட்டதன் மூலம், ஒரு லிட்டர் பெட்ரோல்  நேற்று ரூ.77.61 க்கு விற்பனையானது.  அதேபோல், டீசல் ஒரு 69 ரூபாய் 56 காசுகளாக இருந்த நிலையில், நேற்று 23 காசுகள் உயர்த்தப்பட்டு 69 ரூபாய் 79 காசுகளாக உயர்த்தப்பட்டு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து