முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசு தாக்கல் செய்த காவிரி வரைவு திட்ட அறிக்கையில் இடம்பெற்ற 10 முக்கிய அம்சங்கள்

திங்கட்கிழமை, 14 மே 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக இறுதித் தீர்ப்பை நிறைவேற்றும் வகையில் சுப்ரீம் கோர்ட்டில் வரைவுத் திட்ட அறிக்கையை மத்திய அரசு நேற்று தாக்கல் செய்தது.

சுப்ரீம் கோர்ட்டில் காவிரி வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் வரைவு செயல் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

1. காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண வாரியம் அல்லது ஆணையம் அல்லது குழு இந்த மூன்றில் ஏதாவது ஒன்று அமைக்கப்படும்.
2. காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த உத்தரவுகளைச் செயல்படுத்தும் அமைப்பின் தலைமை அலுவலகம் பெங்களூருவில் செயல்படும்.
3. காவிரி ஆணையத்தின் தலைவரை மத்திய அரசு நியமிக்கும். அந்தத் தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 65 வயதுவரை பதவியில் இருப்பார். பொறியியல் துறையில் வல்லுனத்துவம் பெற்றவராகவோ அல்லது மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருப்பவர் தலைவராக நியமிக்கப்படுவார்.
4. காவிரி விவகாரத்தில் தொடர்புடைய தமிழகம், கேரளா, கர்நாடகம், புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களில் இருந்தும் ஒவ்வொரு பகுதிநேர உறுப்பினர்கள் இடம் பெறுவர்.
5. இந்த அமைப்பின் ஆலோசனையின் அடிப்படையில் அறிவுரையின் படி, அணைகள், நீர்தேக்கங்கள் செயல்படுத்தப்படும்.
6. ஒவ்வொரு ஆண்டு ஜூன் மாதமும், அணைகளில் உள்ள நீரின் இருப்பு எவ்வளவு என்பதை இந்தக் குழு ஆய்வு செய்யும்.
7. இந்த அமைப்பின் நிர்வாகச் செலவு, தலைவர், உறுப்பினர்கள் ஆகியோர் ஊதியம், நிர்வாகச் செலவு ஆகியவற்றில் 80 சதவீதத்தைத் தமிழகமும், கர்நாடகமும் தலா 40 சதவீதம் எனப் பகிர்ந்து கொள்ள வேண்டும். கேரள மாநிலம் 15 சதவீதத்தையும், புதுச்சேரி 5 சதவீதமும் பங்களிப்பாக அளிக்க வேண்டும்.
8. இந்த அமைப்பு அணைகளில் உள்ள நீர் இருப்பைக் கண்காணித்தல், நீரை எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு நீரைத் தீர்ப்பின் அடிப்படையில் பகிர்ந்தளித்தல் மற்றும் காவிரி நீர் பங்கீட்டை முறைப்படுத்தி கட்டுக்குள் கொண்டுவரும். அணைகளில் உள்ள நீரைக் கண்காணித்து, நீர் திறந்துவிடுதலையும் கண்காணிக்கும்.
9. இந்தக் குழுவில் மொத்தம் 10 உறுப்பினர்கள் இடம் பெறுவர்.
10. காவிரி நதிநீர் பங்கீட்டுக் குழுவில் இருவர் முழுநேர உறுப்பினர்கள், இருவர் பகுதி நேர உறுப்பினர்களாகவும், மாநிலத்துக்கு ஒருவர் எனவும் இருப்பார்கள். இதில் மத்திய நீர்வளத்துறை செயலாளரும் இடம் பெறுவார்.

காவிரி மேலாண்மை வாரியத்துக்கு இணையான அதிகாரம் படைத்த அமைப்பாக இது இருக்கும் என வரைவுத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் வரும 16-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து