முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது - துணை முதல்வர் ஓ.பி.எஸ் பேட்டி

திங்கட்கிழமை, 14 மே 2018      தமிழகம்
Image Unavailable

மதுரை : காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு தாக்கல்

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய நீர்வளத்துறை செயலர் யுபி சிங் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரானார். இந்த வழக்கில் வரைவு திட்ட அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்தது. சுப்ரீம் கோர்ட்  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேரில் ஆஜராகி, வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து காவிரி வரைவு திட்ட அறிக்கையின் நகல்கள் 4 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி தொடர்பான வழக்கை மே 16-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.

மிகப்பெரிய வெற்றி

இந்த நிலையில் இந்த காவிரி மேலாண்மை செயல்திட்டம் குறித்து துணை முதல்வர்

ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் தெரிவிக்கையில், இதுகுறித்து தமிழக அரசு ஆராய்ச்சி செய்யும் என்றார். மேலும் அவர், காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை காப்பாற்ற அரசு இறுதிவரை போராடும். நீர்ப் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் தெளிவாக கூறியுள்ளது. காவிரி நீர்ப் பங்கீடு சாதக, பாதகங்கள் பற்றி கருத்து தெரிவிக்கப்பட்டபின் சுப்ரீம் கோர்ட் முடிவெடுக்கும். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை செயல்படுத்தும் கடமை மத்திய அரசுக்கு உள்ளது, மத்திய அரசு அளித்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்று தெரியாது, இதனால் இதுகுறித்து முழுமையாக ஆராய்ந்த பின் விளக்கம் அளிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து