முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாளிகள் - துருக்கி பிரதமர் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 15 மே 2018      உலகம்
Image Unavailable

ஜெருசலேம் : அமெரிக்காவும், இஸ்ரேலும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு கூட்டளிகள் என்று துருக்கி பிரதமர் பினாலியில் திரிம் விமர்சித்துள்ளார்.

ஜெருசலேமில் அமெரிக்க தூதரக அலுவலகம் திறக்கப்படுவதை எதிர்த்து பாலஸ்தீனர்கள் காஸா எல்லையில் போராட்டம் நடத்தினர். இதில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டதாவும், 2,000க்கும் அதிகமானோர் காயம் அடைந்ததாகவும் பாலஸ்தீனம் தெரிவித்தது. இஸ்ரேல் ராணுவத்தின் இந்தத் தாக்குதலை துருக்கி கடுமையாக கண்டித்துள்ளது.

இதுகுறித்து துருக்கி பிரதமர் பினாலில் பினாலியில் திரிம் கூறும்போது, துரதிர்ஷ்டவசமாக, அமெரிக்கா அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து மனித குலத்திற்கு எதிரான இந்தக் குற்றத்தில் பங்கெடுத்துக் கொண்டது. அமெரிக்காவும், இஸ்ரேலும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு கூட்டாளிகளாக உள்ளனர் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து