முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுனந்தா புஷ்கர் வழக்கு: டெல்லி போலீசாரின் குற்றச்சாட்டு அபத்தமானது என்கிறார் சசிதரூர்

செவ்வாய்க்கிழமை, 15 மே 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : முன்னாள் மத்திய அமைச்சரும், திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூர் கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி சுனந்தா புஷ்கரை திருமணம் செய்தார். 2014-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி சுனந்தா புஷ்கர் டெல்லியில் உள்ள பிரபலமான ஓட்டல் அறையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக சசிதரூரிடம் விசாரணை நடத்தினர். முதலில் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்த போலீசார் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி இதனை கொலை வழக்காக பதிவு செய்தனர்.

இந்த நிலையில் டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போலீசார் குற்ற பத்திரிகை தாக்கல் செய்தனர். 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் சசிதரூர் மீது மனைவியை கொடுமைப்படுத்துதல், தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய சட்ட பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது ஜாமீனில் வர முடியாத வழக்குகள் ஆகும். இதனை வருகிற 24-ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்வதாக டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் அறிவித்துள்ளார். டெல்லி போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை குறித்து சசிதரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

சுனந்தா புஷ்கர் மரணத்தில் டெல்லி போலீசார் என் மீது குற்றம் சாட்டியுள்ளது அபத்தமானது. இதற்கு தக்க பதிலை தெரிவிப்பேன். சுனந்தாவின் தற்கொலைக்கு நான் காரணமில்லை என்பது அனைவருக்கும் தெரியும். சுனந்தா வழக்கில் எவரையும் சந்தேகிக்கும் வகையில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லையென்று டெல்லி ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி டெல்லி போலீஸ் அதிகாரி தெரிவித்தார். 6 மாதத்தில் இந்த கருத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுனந்தாவை நான் தற்கொலைக்கு தூண்டியதாக அதே போலீஸ் துறை கூறுகிறது. இது நம்பும்படியாக இல்லை. இதனை எதிர்த்து நான் கோர்ட்டில் எனது வாதத்தை பதிவு செய்வேன். இவ்வாறு அவர் அந்த டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து