எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூர் : நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவு நேற்று வெளியானது. இதில் பா.ஜ.க., காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் போன்ற எந்த கட்சிக்குமே தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டதை போலவே யாருக்கும் ஆட்சி அமைக்க தேவையான அறுதிப் பெரும்பான்மை இந்த தேர்தலில் கிடைக்கவில்லை. இருப்பினும், பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆகிய இரு தரப்பும் ஆட்சி அமைக்க போட்டா போட்டி போடுகின்றன. இரு தரப்பு தலைவர்களும் கர்நாடக கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளனர்.
வாக்குசேகரிப்பு
கர்நாடக சட்டமன்ற தேர்தல் கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான காங்கிரசும், எதிர்க்கட்சியாக இருந்த பாரதீய ஜனதாவும் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கின. குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளமும் தேர்தல் களத்தில் குதித்தது. இதனால் இந்த தேர்தலில் மும்மனை போட்டி நிலவியது. பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்தார். மேலும், அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, ஸ்மிருதி இராணி, முன்னாள் முதல்வர் எடியூரப்பா போன்ற தலைவர்களும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்குசேகரித்தனர்.
72 சதவீத வாக்குகள்
அதேபோல், மீண்டும் ஆட்சியை கைபற்றியே ஆக வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் கட்சி பிரசாரத்தில் ஈடுபட்டது. இதற்க்காக அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவரது அன்னையும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான சோனியா காந்தியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க, காங்கிரஸ் இடையே பிரச்சாரத்தில் கடும் போட்டி நிலவியது. போதாக்குறைக்கு மதசார்பற்ற ஜனதா தள தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இப்படி கிட்டத்தட்ட 3 வாரம் நடைபெற்ற அனல் பறக்கும் பிரசாரம் கடந்த 10-ம் தேதி ஓய்ந்தது. மொத்தம் 222 சட்டமன்ற தொகுதிகளில் 12-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் 72 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. தேர்தலில் நாங்களே வெற்றி பெறுவோம் என்று இருதரப்பினருமே மார்தட்டி வந்தனர். ஆனால் முன்னதாக இந்த தேர்தலில் தொங்கு சட்டசபைதான் அமையும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன.
நிலைமை மாறியது
இந்நிலையில் நாடே ஆவலுடன் எதிர்பார்த்த கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. நேற்று தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கியதில் இருந்தே பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பெரும்பாலன தொகுதிகளில் முன்னிலையில் இருந்தனர். இதனால் பாரதீய ஜனதா வெற்றி பெற்று விட்டதாகவும், எடியூரப்பாவே முதல்வராக போகிறார் என்றும் முதலில் வந்த செய்திகள் தெரிவித்தன. எடியூரப்பாவுக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்துக்களை கூற தொடங்கினார்கள். ஆனால் பிற்பகலுக்கு பிறகு நிலைமை மாறியது. காங்கிரஸ் கட்சி முன்பு இருந்ததை விட அதிக இடங்களை கைப்பற்றியதாக செய்திகள் வரத் தொடங்கின.
பா.ஜ.க 104 இடங்கள்
இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 224 சட்டமன்ற தொகுதிகளில் 2 தொகுதிகள் நீங்கலாக மீதமுள்ள 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த 222 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகளும் நேற்று மாலையில் அறிவிக்கப்பட்டன. அதன்படி, பாரதீய ஜனதா கட்சி 104 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 78 இடங்களையும், குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 38 இடங்களையும், சுயேட்சை வேட்பாளர்கள் 2 இடங்களையும் கைப்பற்றினர். 104 இடங்களை கைப்பற்றிய பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
கவர்னருடன் சந்திப்பு
கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க 112 இடங்கள் தேவை. அந்த மேஜிக் நம்பரான 112 தொகுதிகள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை இந்த தேர்தல் முடிவு நினைவூட்டியது. தனி மெஜாரிட்டி யாருக்குமே கிடைக்காத நிலையிலும் பா.ஜ.க., காங்கிரஸ் இரு தரப்பினருமே ஆட்சி அமைக்க வியூகம் வகுத்தனர். நேற்று மாலை மாநில கவர்னர் வஜூபாய் வாலாவை பா.ஜ.க. மூத்த தலைவர் எடியூரப்பா சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
குமாரசாமியும் சந்திப்பு
இந்த நிலையில் நேற்று திடீர் திருப்பமாக மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவளிக்க காங்கிரஸ் முடிவெடுத்தது. குறிப்பாக, பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்ற நோக்கத்தில் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவளிக்க காங்கிரஸ் முடிவெடுத்தது. இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, குமாரசாமியின் தந்தை தேவகவுடாவுடன் பேச்சு நடத்தினார். இறுதியில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் இணைந்து ஆட்சி அமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. மேலும் குமாரசாமி முதல்வராகவும் காங்கிரஸ் ஒப்புக் கொண்டது. இதையடுத்து குமாரசாமியும் நேற்று மாலை கவர்னர் வஜூபாய் ரூடாபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
14 ஆண்டுகளுக்கு பிறகு...
எங்களுக்குள் கருத்து முரண்பாடு எதுவும் இல்லை. ஒருமித்த கருத்தோடு இருக்கிறோம் என்று காங்கிரஸ் மாநில தலைவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கடந்த 2004-ம் ஆண்டு இதே போன்ற ஒரு நிலை ஏற்பட்ட போது மதசார்பற்ற ஜனதா தளமும், காங்கிரசும் இணைந்து கூட்டணி அரசை அமைத்தன. கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. குமாரசாமியை முதல்வராக்க காங்கிரஸ் மேலிடம் முழு மனதாக ஒப்புக் கொண்டுள்ளது. கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் ஆட்சி அமைக்க எடியூரப்பாவும் உரிமை கோரியுள்ளார். குமாரசாமியும் உரிமை கோரியுள்ளார். இந்த இருவரில் யாரை கவர்னர் அழைக்கப் போகிறார் என்பது இன்று தெரியும்.
பிரதமர் மோடி நன்றி
இதற்கிடையில் டெல்லியில் இருந்து பா.ஜ.க. மூத்த அமைச்சர்கள் பெங்களூர் விரைந்தனர். இன்று அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பா.ஜ.க. சட்டமன்ற தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மேலும், பா.ஜ.க. மூத்த அமைச்சர்கள் புதிய அரசு அமைப்பது பற்றி மாநில தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகின்றனர். இந்த நிலையில் தேர்தல் தோல்வியை அடுத்து அம்மாநில முதல்வர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க கர்நாடக மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு தண்ணீர் தர மாட்டோம் என்று அடிக்கடி வாய்கிழிய கத்தும் வட்டாள் நாகராஜ் இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.