முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் 6 பேர் எங்களுடன் பேசி வருகின்றனர் காங். தலைவர் பாட்டீல் சொல்கிறார்

புதன்கிழமை, 16 மே 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர்: பா.ஜ.க.-வைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ-க்கள் தங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் முக்கியத் தலைவர் எம்.பி.பாட்டீல் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழலில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பாக பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, கவர்னரைச் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார். அதுபோல ம.ஜ.த, காங்கிரஸ் கூட்டணியும் கோரிக்கை வைத்துள்ளது.

எனவே ஆட்சி அமைப்பது தொடர்பாக பெரும்பான்மையை நிரூபிக்கும் விதமாக எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெரும் வகையில் பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கட்சிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக காங்கிரஸ் முக்கியத் தலைவர் எம்.பி.பாட்டீல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

இங்கு காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர். எங்கள் எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறுவதாக வரும் தகவல்கள் எல்லாம் வதந்தியாகும். ஆனால் பா.ஜ.க-வைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ-க்கள் எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து