முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவில் ஆட்சியமைக்க கவர்னர் பா.ஜ.க.வை அழைப்பார் எடியூரப்பா நம்பிக்கை

புதன்கிழமை, 16 மே 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர்: கர்நாடகாவில் ஆட்சியமைக்க கவர்னர் வஜுபாய் வாலா, பா.ஜ.க.வை அழைப்பார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் எடியூரப்பா தெரிவித்தார்.

பெங்களூருவில் நேற்று காலை நடைபெற்ற பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், பா.ஜ.க சட்டமன்றக் குழுத் தலைவராக எடியூரப்பா தேர்வு செய்யப்பட்டார். பிறகு, அவர் கவர்னர் மாளிகைக்குச் சென்று கவர்னர் வஜுபாய் வாலாவை சந்தித்தார். அப்போது, கர்நாடகாவில் ஆட்சியமைக்க பா.ஜ.கவுக்கு அழைப்பு விடுக்குமாறு தான் கேட்டுக் கொண்டதாகவும், பா.ஜ.கவின் கோரிக்கையை பரிசீலித்து, கர்நாடகாவில் ஆட்சியமைக்கும் விவகாரத்தில் சரியான முடிவை அறிவிப்பதாகவும் கவர்னர் உறுதி அளித்ததாகவும் எடியூரப்பா கூறினார். மேலும், கர்நாடகாவில் ஆட்சியமைக்க கவர்னர் வஜுபாய் வாலா, பா.ஜ.க.வை அழைப்பார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் எடியூரப்பா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து