முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் அருகே சாலை விபத்து காயமடைந்தவர்களுக்கு கலெக்டர் நடராஜன் நேரில் ஆறுதல்

புதன்கிழமை, 16 மே 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் அருகே எட்டிவயல் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்து அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
 ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி அருகேயுள்ள மாயக்குளம் பகுதியைச் சார்ந்த 16 நபர்கள் டூரிஸ்டர் வேன் வாகனத்தின் மூலம் பழனிக்கு சென்று ராமநாதபுரம் திரும்பியுள்ளனர். ராமநாதபுரம் அருகேயுள்ள எட்டிவயல் கிராம பகுதியில் நேற்று  அதிகாலையில் வாகனம் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த ஒருவருக்கு பலத்த காயமும், 8 நபர்களுக்கு லேசான காயங்களும் ஏற்பட்டது.  அவர்கள் அனைவரும் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி மற்றும் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. 
 இந்நிலையில் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்த விபரங்களையும், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்த விபரங்களையும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஜவஹர்லால் நேரு உடனிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து