முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். பிளே-ஆப் சுற்றுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது ராஜஸ்தான் கேப்டன் ரகானே நம்பிக்கை

புதன்கிழமை, 16 மே 2018      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா: ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையிலும், ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற இன்னும் எங்களுக்கு வாய்ப்பு உள்ளது என்று கேப்டன் ரகானே கூறியுள்ளார்.

சிக்கல்...
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று கொல்கத்தாவில் நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் தோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 142 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அடுத்து விளையாடிய கொல்கத்தா 18 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 145 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த தோல்வி மூலம் ராஜஸ்தான் அணி ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தோல்வி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரகானே கூறியதாவது:-

ஜெய்ப்பூரில்...
துரதிருஷ்டவசமாக நாங்கள் 142 ரன்கள் மட்டுமே எடுத்துவிட்டோம். 170 முதல் 180 ரன்கள் வரை எடுத்திருக்க வேண்டும். இன்னும் எங்களுக்கு பிளேஆப் சுற்று வாய்ப்பு இருக்கிறது. இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்று முன்னேற்றம் அடைய வேண்டும். எங்களது கடைசி போட்டி சொந்த மைதானமான ஜெய்ப்பூரில் நடக்கிறது. அந்த ஆடுகளம் பற்றி நன்கு அறிவோம். எங்களது அணியில் முக்கிய வீரர்களான ஜோஸ் பட்லர், பென் ஸ்டோர்க் சொந்த நாட்டு அணிக்கு திரும்புவதால் அவர்களை தவறவிடுகிறோம். அவர்கள் எவ்வளவு அபாயகரமான வீரர்கள் என்பதை அறிவோம். அதேவேலையில் பட்லர் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருப்பது மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து