எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.-ஒரு கோடி மோடி சேர்ந்தாலும் காங்கிரஸ் இல்லாத இந்தியாவை மோடியால் ஏற்படுத்திட முடியாது என்று மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பரபரப்பு பேட்டியளித்தார்.
மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் ஊழியர்கள் கூட்டம் திருமங்கலம் நகர் உசிலம்பட்டி சாலையிலுள்ள வி.எஸ்.ஆர் மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட தலைவர் ஆர்.ஜெயராம் தலைமை வகித்தார்.மாநகர் மாவட்ட தலைவர் காhத்திகேயன் முன்னிலை வகித்தார்.மாநில பொதுக்குழு உறுப்பினர் பாண்டியன் வரவேற்று பேசினார். ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த ஊழியர் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.முன்னதாக கூட்டத்திற்கு வருகை தந்த திருநாவுக்கரசருக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஓ.ஆர்.இளங்கோவன்ராம் மற்றும் நிர்வாகிகள் ஆளுயர மாலையணிவித்து மலர்கிரீடம் சூட்டி சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசுகையில்: தமிழகத்தில் கட்சி ரீதியாக உள்ள 72 மாவட்டங்களுக்கும் நேரில் சென்று நிர்வாகிகளை சந்தித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்.தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் 35லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.இதனை 50லட்சமாக உயர்த்திட உறுப்பினர்களை அதிகமாக சேர்த்திட வேண்டும்.நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பது வரவேற்கத் தக்கது.அவர்கள் சந்திக்கும் முதல் தேர்தலில் அவர்களது கட்சி வெற்றி பெறாவிட்டால் கட்சி காலியாகிவிடும்.அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சிக்கு மாற்றாக காங்கிரஸ் கட்சி திகழ்கிறது.பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்தக்கூடிய சக்தி காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உள்ளது. அடுத்த பிரதமராக வரக்கூடிய ஆற்றல் மிக்க தலைவர் ராகுல்காந்தி மட்டும் தான்.விரைவில் வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் மாற்றம் ஏற்பட்டு ராகுல்காந்தி பிரதமராவது நிச்சயம்.கர்நாடக மாநில ஆளுநர் அரசியல் சட்டத்திற்கும், சட்டமன்ற விதிமுறைகளுக்கும் மாறாக மத்திய அரசின் ஏஜென்டாக செயல்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.
தமிழகம் உள்ளிட்ட நாடு முழுதும் இந்த ஜனநாயக படுகொலையை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்ட ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளது. கர்நாடகாவில் 224 தொகுதிகளில் 104 இடங்களை மட்டுமே பிஜேபி பெற்றுள்ளது.காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்திடம் 118 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.இருப்பினும் அறுதி பெரும்பாண்மை இல்லாத பிஜேபிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.குதிரை பேரத்திற்கும் ஊழலுக்கும் வழிவகுத்திடும் வகையில் மோடியின் பேச்சை கேட்டு ஆளுநர் மத்திய அரசின் ஏஜென்டாக செயல்பட்டு எடியூரப்பாவை முதலமைச்சராக்கியிருப்பது சட்ட விரோதம்.இந்த ஆட்சி நிலைக்காது. மீண்டும் கர்நாடகத்தில் தேர்தல் வர வாய்ப்பிருக்கிறது.தேசத்தில் எல்லாம் ஒன்றாக இருக்கவேண்டும் அதிலும் ஒரே கட்சியாக பிஜேபி மட்டும் இருக்கவேண்டும்,காங்கிரசை அழிப்பேன்,காங்கிரஸ் இல்லாத தேசத்தை உருவாக்குவேன் என்று மோடி சொல்லுவது பகல் கனவு.ஒரு மோடியல்ல ஒருகோடி மோடி சேர்ந்தாலும் காங்கிரசை இல்லாத இந்தியாவை மோடியால் ஏற்படுத்திட முடியாது என்று தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ஆர்.ஜெயராம் தலைமையில் நகரத் தலைவர்கள் தாமோதரன்,கருப்பணன்,கபீர்அகமது, சசிவர்ணதேவன், கணேசன்,வட்டார தலைவர்கள் இளங்கோவன்,முருகேசன்,சுப்பிரமணியன்,சேகர்,கிங்பாபு, பூணூல்,முத்துவேல்,காசிநாதன்,வெஸ்டன்முருகன்,ரெங்கமலை,புதுராஜா,ஜெயராமன்,நன்மாறன்,மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பிருதிவிராஜ்,ராஜ்குமார்,சுப்பிரமணியன், ரமேஷ்பாபு,பிரேம்சந்தர்,பொன்மணிகண்டன்,காமாட்சிசுந்தரம் மற்றும் மாவட்ட கமிட்டி நிர்வாகிகள் மாவட்ட பொதுச் செயலாளர்கள்,மாவட்டச் செயலாளர்கள்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்,இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள்,மகிளா காங்கிரஸ்,சேவாதள நிர்வாகிகள், வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள்,பூத் கமிட்டி உறுப்பினர்கள்,கிராம கமிட்டி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ---
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி6 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 5 hours ago |
ரவா பர்பி1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து: சந்திரசேகர ராவ் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
17 Apr 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக வந்த புகாரையடுத்து சந்திரசேகரராவ் இன்று தனது நிலைப்பாட்டை விளக்குமாறு தேர்தல் ஆணையம்
-
சிறையில் இருந்தே ஆட்சி செய்ய கெஜ்ரிவாலை அனுமதிக்க வேண்டும் : டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி மனு
17 Apr 2024புதுடெல்லி : சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி கட்சி மனுத்தாக்கல் செய்துள்ளது.
-
கோவையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்திக் வாக்கு சேகரிப்பு
17 Apr 2024கோவை : கோவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? - எடப்பாடி பழனிசாமி பேட்டி
17 Apr 2024சேலம் : மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
பிரசாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு: நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி
17 Apr 2024வேலூர் : பிரச்சாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நடிகர் மன்சூர் அலிகான் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
150 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க வெற்றி பெறாது : ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி
17 Apr 2024காசியாபாத் : மக்களவை தேர்தலில் 150 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க.விற்கு வெற்றி கிடைக்காது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.