முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி விவகாரம்: தமிழிசை பெருமிதம்

வெள்ளிக்கிழமை, 18 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: காவிரி விவகாரத்தில் பா.ஜ.க. தமிழகத்திற்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கில் நேற்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளையும் சுப்ரீம் கோர்ட் முடித்து வைத்த நிலையில் தீர்ப்பு குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது,
காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்  தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக பா.ஜ.க. செயல்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தை கிடப்பில் போட்ட காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி அரசு எவ்வளவோ விமர்சனம் செய்தார்கள். கர்நாடகாவில் பா.ஜ.க வந்தால் நியாயமான தீர்வும், நீர் பங்கீடும் தமிழகத்திற்கு கிடைக்கும். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து