முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கியூபாவில் நடந்த விமான விபத்தில் 107 பேர் பலி

சனிக்கிழமை, 19 மே 2018      உலகம்
Image Unavailable

ஹவானா: கியூபா தலைநகர் ஹவானாவில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் நேற்று முன்தினம் தீப்பிடித்து வெடித்துச் சிதறியது. இதில் பயணம் செய்த 107 பேர் பலியாகி இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

கியூபா தலைநகர் ஹவானாவில் இருந்து அந்த நாட்டின் ஹோல்ஜியூன் நகருக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் விமானி, பணிப்பெண்கள், பயணிகள் உட்பட 107 பேர் இருந்தனர். ஓடுதளத்தில் இருந்து விமானம் மேலே எழும்பிய சிறிது நேரத்தில் தீப்பிடித்து வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 107 பேரும் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. சம்பவ பகுதியில் தீயணைப்பு வாகனங்களும் நூற்றுக்கணக்கான வீரர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த விபத்து குறித்து உயர்நிலை விசாரணைக்கு கியூபா அரசு உத்தரவிட்டுள்ளது. பழைய விமானம் என்பதால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்தில் தீ பற்றி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து