முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கியூபா விமான விபத்து: பலி எண்ணிக்கை 110-ஆக உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2018      உலகம்
Image Unavailable

ஹவானா: கியூபாவில் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 110-ஆக உயர்ந்துள்ளது.

கியூபாவிலுள்ள ஹவானா விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட போயிங் 737 வகை பயணிகள் விமானம், சிறிது நேரத்திலேயே சான்டியாகோ டி லாஸ் வேகாஸ் விமானநிலையத்துக்கு அருகிலுள்ள விவசாய நிலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கி 110 பேர் உயிரிழந்துள்ளதாக கியூபா போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக 3 பேர் உயிர் தப்பினர். தூரத்தில் இருந்து கறும்புகை வெளியானதைக் கண்ட அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தபோது விமான விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

உடனடியாக பொதுமக்கள் மற்றும் அரசு மீட்புக் குழுக்கள் மீட்பு நடவடிக்கையில் முழு வீச்சில் ஈடுபட்டது. சம்பவ இடத்துக்கு கியூபா அதிபர் மிகுல் டியாஸ்-கானில் நேரில் சென்று பார்வையிட்டார். விபத்து குறித்த காரணங்கள் இதுவரை தெரியவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து