எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,-: ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சி பகுதிகளில் வளர்ந்து வரும் மாவட்டங்கள் திட்டத்தின் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்தும் மற்றும் காரணிகள் குறித்தும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வசதி அரசுச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
இந்திய அளவில் வளர்ந்து வரும் மாவட்டங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 115 மாவட்டங்களில் இராமநாதபுரம் மாவட்டமும் ஒன்றாகும். அதனடிப்படையில் வேளாண்மை மற்றும் நீர்ப்பாசன மேம்பாடு, பொது சுகாதார முன்னேற்றம், கல்வி வளர்ச்சி, அடிப்படை உட்கட்;டமைப்பு மேம்பாடு மற்றும் தொழில்திறன் பயிற்சி வழங்கி தனிநபர் வருமானத்தை உயர்த்துதல் ஆகிய 5 காரணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு இத்திட்டங்கள் தேர்வு செய்யப்பட்ட 115 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளன.
அதன் பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் இந்த திட்டங்களை ஆய்வு செய்வதற்க்காக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வசதி அரசுச் செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா மற்றும் மாநில வழிகாட்டுதல் அலுவலர், உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையாளருமான அமுதா ஆகியோர்கள் சனிக்கிழமை வருகை தந்தனர். இவர்களை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் வரவேற்றார்.அதன் பின்னர் முதலாவதாக, பரமக்குடி ஊராட்சி ஒன்றியம், அரியனேந்தல் கிராமத்தில் செயல்பட்டு வரும் கிராம ஊராட்சி சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.இதனை தொடர்ந்து சேவை மையத்தின் பயன்பாடு மற்றும் மையத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அடிப்படை சான்றுகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, அரியனேந்தல் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிலுள்ள சமுதாய நலக்கூட கட்டிடத்தினை ஆய்வு செய்தார். அதன்பிறகு அரியனேந்தலில் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை கூடம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் கூடம் ஆகியவற்றின் பயன்பாடு குறித்தும் நேரில் களஆய்வு செய்து, அலுவலர்களிடத்தில் விபரங்களை கேட்டறிந்தார். பின்னர் இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று மருத்துவமனை வளாகத்தில், பிறந்த சிசுக்களுக்கு தாய்மார்கள் தாய்ப்பால் கொடுத்திட ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள தாய்ப்பால் ஊட்டும் அறையினை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, மகப்பேறு, தாய்சேய் நலன் தொடர்பாக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மருத்துவர்களிடத்தில் கேட்டறிந்தார்.
அதனையடுத்து, தேவிப்பட்டிணம் கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நவீன அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இம்மையத்தின் மூலம் சிறு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் நலனுக்காக வழங்கப்படும் ஊட்டச்சத்து மாவு மற்றும் மருந்துகள் குறித்து அலுவலர்களிடத்தில் கேட்டறிந்தார். தொடர்ச்சியாக, கழுகூரணி கிராமத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் பாண்டியன் கிராம வங்கியின் மூலம் தொழில்திறன் பயிற்சி வழங்கும் திட்டத்தின் கீழ் மகளிருக்கு பனை ஓலை மூலம் பாய், கூடை பின்னுதல் தொடர்பாக வழங்கப்படும் பயிற்சிகளைப் பார்வையிட்டனர். இவ்வாறு பின்னப்படும் பாய்கள் , கூடைகளில் கண்கவரும் வகையில் வண்ணங்கள் பயன்படுத்தி கூடுதல் இலாபம் கிடைக்கும் வகையில் சந்தைப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்கள். அதன்பிறகு கழுகூரணியில் உள்ள ஊரணியினை ஆழப்படுத்தி அதிகளவில் நீர் சேமிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரணி சீரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தனர்.
அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் வளர்ந்து வரும் மாவட்டங்கள் திட்டப்பணிகளின் கீழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து கலந்து ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஹெட்சி லீமா அமாலினி, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் குருநாதன், இணை இயக்கநர்கள் (மருத்துவப்பணிகள்) மரு.சகாய ஸ்டீபன்ராஜ், (வேளாண்மை)இந்திராகாந்தி, (கால்நடைப் பராமரிப்புத் துறை) மோகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) குமரகுருபரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (வேளாண்மை)ராஜா, (வளர்ச்சி) உமாமகேஸ்வரி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் செல்லத்துரை, மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் மாரியம்மாள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதீஸ்குமார் உட்பட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.