முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கியூபா பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு

திங்கட்கிழமை, 21 மே 2018      உலகம்
Image Unavailable

ஹவானா : கியூபாவில் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது.

சுமார் 40 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த அந்த விமானம் குறித்து ஏற்கெனவே பாதுகாப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த நிலையிலும், அந்த விமானம் தொடர்ந்து இயக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், விமான விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய இந்தக் கருப்புப் பெட்டி உதவும் என்று கூறப்படுகிறது.

கியூபா தலைநகர் ஹவானா விமான நிலையத்திலிருந்து ஹோல்கைன் நகருக்கு அந்த நாட்டு அரசுக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் 107 பயணிகள், 6 விமானப் பணியாளர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றது. விமானம் உயரே எழும்பிய சில நிமிடங்களில், விமான நிலையத்துக்கு அருகே உள்ள பகுதியில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் 110 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த நிலையில் 3 பெண்கள் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. அவர்களில் ஒரு பெண் மயக்கம் தெளிந்து பேசியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து