முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்தடுத்த படங்களிலும் கிராமத்து பெண்ணாகவே நடிக்கும் அர்த்தனா

சனிக்கிழமை, 26 மே 2018      சினிமா
Image Unavailable

Source: provided

எனக்கு சொந்த ஊர் திருவனந்தபுரம். ஜர்னலிசம் படித்து விட்டு , இப்போது சைக்காலஜி படித்துக்கொண்டு இருக்கிறேன் .

வள்ளிகாந்த் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `செம' படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அர்த்தனா அவரது அடுத்தடுத்த படங்களிலும் கிராமத்து பின்னணியில் வருகிறார். ஜி.வி.பிரகாஷ் - அர்த்தனா நடிப்பில் உருவாகி  இருக்கும் படம் `செம'. மே 25-ஆம் தேதி ரிலீசானது 

வள்ளிகாந்த் இயக்கியிருக்கும் இந்த படத்தில் யோகிபாபு, கோவை சரளா, மன்சூர் அலிகான், சுஜாதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பின்னர் மேடையில் அழுத காரணம் குறித்து நடிகை அர்த்தனா கூறியதாவது:-

சமுத்திரக்கனியின் தொண்டன் படத்தில் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனேன் செம படத்தில் திருச்சி பகுதி கிராமத்து பெண்ணாக வருகிறேன். சில மாதங்கள் ஒரே குடும்பமாக படக்குழுவுடன் பழகினேன். அவர்களை பிரிகிறேன் என்ற ஆதங்கத்தால் அழுதேன் .என வளர்ச்சிக்கு முக்கிய காரணம் எனது தாத்தா ஆவார். நான் உணர்ச்சிவசப்படுவேன்.

படப்பிடிப்பில் டைரக்டரோ, தயாரிப்பாளரோ எனக்கு தொந்தரவு கொடுக்கவில்லை. நான் அழுததற்கு காரணம் வேறு. எளிதில் நான் உணர்ச்சி வசப்படுவேன். படப்பிடிப்பில் இயக்குனரும், நடிகர்களும் கஷ்டப்பட்டதை பார்த்தேன். எல்லோருடைய வாழ்க்கையும் இந்த படத்தில் உள்ளது.

அதை நினைத்து படம் நன்றாக ஓட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அழுகை வந்தது. இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக வருகிறேன். அடுத்து கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தியுடன் நடிக்கிறேன்”  இவ்வாறு அர்த்தனா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து