முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு வாபஸ்: கலெக்டர்

ஞாயிற்றுக்கிழமை, 27 மே 2018      தமிழகம்
Image Unavailable

தூத்துக்குடி: தூத்துக்குடியில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இயல்பு நிலை திரும்பியதையடுத்து 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு’ சார்பில் கடந்த 22-ம் தேதி  கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
 
இதன் காரணமாக தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது, கடந்த 4 நாட்களாக பேருந்துகள் இயங்காததாலும், கடைகள் திறக்கப்படாததாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால் 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து