முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு 10 அடுக்கு மாடி விடுதி முதல்வர் இ.பி.எஸ் தலைமையில் சபாநாயகர் திறந்தார்

ஞாயிற்றுக்கிழமை, 27 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: சென்னை அரசினர் தோட்டத்தில் ரூ 39.63 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான விடுதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்.

சட்டசபையின் வைரவிழா கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தங்குவதற்காக சென்னை ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில் விடுதி கட்ட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அடிக்கல் நாட்டினார். இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. ரூ. 39.63 கோடி மதிப்பீட்டில் 10 அடுக்கு மாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. புதிய கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

பத்து அடுக்கு மாடி கொண்ட இந்த கட்டிடத்தில் 68 அறைகள் கட்டப்பட்டுள்ளன. அதில் 60 அறைகள் முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்காகவும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சட்டமன்ற குழுக்களுக்காக 8 அறைகளும் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறைகளும் 593 சதுர பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. பத்தாவது மாடியில் 250 பேர் அமரும் வகையில் அரங்கம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் குடிநீர் வசதிக்கான கீழ்நிலை நீர்தேக்க தொட்டி, மின் மோட்டார் அறை, சிமெண்ட் சாலை, மழைநீர் வடிகால் வசதி, நான்கு லிப்ட் வசதிகளோடு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை வரும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தங்க வசதியாக சட்டமன்ற இணையதளத்தில் பதிவு செய்யும் வசதியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார். தமிழ்நாடு சட்டமன்ற பேரவை நடவடிக்கை குறிப்புகளை இணையதளத்தில் பெறும் வசதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

முடிவில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நன்றி தெரிவித்தார். கட்டிடத்தில் தங்குவதற்கான வசதியை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அடையாள அட்டைகளுடன் குவிந்தனர். விரல் ரேகை பதிவுக்கு பின்னரே முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விடுதிக்குள் அனுமதிக்கப்படுவர் என்பதால் அதனை பதிவு செய்ய ஏராளமான முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் ரமணா,சோமசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஜீனத் சர்புதீன், என்.ஆர்.ராஜேந்திரன், ஆண்டிமடம் தங்கராஜ், முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் , முன்னாள் அ.தி.மு.க கவுன்சிலர் டி.சிவராஜ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து