முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக தலைவராக சோலை எம்.ராஜா தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 27 மே 2018      மதுரை
Image Unavailable

மதுரை, - தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக தலைவராக சோலை எம்.ராஜா மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.
 தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாநில பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் தினேஷ்படேல் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க செயலாளர் ஜெ.எம்.பெர்னான்டோ முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக தலைவராக மூன்றாவது முறையாக சோலை எம்.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச்செயலாளராக சவியுல்லா, பொருளாளராக சண்முகம், அமைப்பு செயலாளராக ராஜராஜேந்திரன், உதவி தலைவர்களாக ஏ.பி.சுப்பிரமணியராஜா, ஏ.வி.நாகராஜன் நிர்வாகிகளாக எஸ்.கபாலி, ஏ.ஆர்.வேலவன், எஸ்.கே.எம்.சிவக்குமார், டி. காந்தபெருமாள், எஸ்.சுபாஷ், ஆர்.சாமியப்பன், தங்கம், எம்.ராஜேந்திரன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளுக்கு அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஒ.எஸ்.மணியன், எம்.எல்.ஏ.க்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சக்கரபாணி, பெரியண்ணன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இது குறித்து தலைவர் சோலை எம்.ராஜா கூறுகையில்:-
அமெச்சூர் கபடி கழக மாவட்ட தலைவர்களாக அமைச்சர்கள் பல்வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றுள்ளனர். கட்சி பேதமின்றி விளையாட்டை மேம்படுத்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து