முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நார்வே செஸ் தொடர்: முதல் இரண்டு சுற்றிலும் விஸ்வநாதன் ஆனந்த் டிரா

புதன்கிழமை, 30 மே 2018      விளையாட்டு
Image Unavailable

ஸ்டாவாங்கர் : நார்வே நாட்டின் ஸ்டாவாங்கரில் நடைபெற்று வரும் அல்டிபாக்ஸ் நார்வே செஸ் தொடரில் விஸ்வநாதன் ஆனந்த்த டிரா செய்துள்ளார்.

டிராவில் முடிந்தது

நார்வே நாட்டின் ஸ்டாவாங்கரில் அல்டிபாக்ஸ் நார்வே செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 27-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் ஜூன் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. பல சாம்பியன் பட்டங்களை வென்ற இந்தியாவின் விஸ்வநாத் ஆனந்த் தனது முதல் ஆட்டத்தில் திங்கட்கிழமை (28-ம் தேதி) அர்மெனியாவின் லெவோன் அரோனியனை எதிர்கொண்டார். இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.

2-வது ஆட்டம் டிரா...

இந்நிலையில் 2-வது ஆட்டம் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில் ஹிகாரு நகமுராவை எதிர்கொண்டார். கருப்பு காய்களுடன் விளையாடிய ஆனந்த் 39 நகர்த்தலுக்குப் பின் டிரா செய்தார். இதனால் முதல் இரண்டு போட்டிகளையும் ஆனந்த் டிரா செய்துள்ளார். தொடக்க சுற்றில் மேக்னஸ் கார்ல்சென் மட்டுமே வெற்றி பெற்றிருந்தார். மற்ற அனைவரும் டிரா மட்டுமே செய்தனர். ஆனால் 2-வது சுற்றில் செர்ஜெய் கர்ஜாகின் எதிராக டிரா செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து