முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்திற்கான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியீடு காவிரி மேலாண்மை வாரியக் குழுவும் அமைக்கப்படும் என அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 1 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான அறிவிப்பு நேற்று மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியக் குழுவும் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்...
காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனையில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மத்திய அரசு செயல் திட்டத்தை தாக்கல் செய்தது. இதற்கு, மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனை அடுத்து, மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டது. மேலும், இதனை உடனே அரசிதழில் வெளியிட வேண்டும், பருவமழை தொடங்குவதற்குள் மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

அரசிதழில்...
எனினும், காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு அரசிதழில் வெளியிடவில்லை. இந்நிலையில், இதற்கு ஆட்சேபம் தெரிவித்து தமிழக அரசு வழக்கு தொடரலாம் என கூறப்பட்ட நிலையில், நேற்று மாலை மத்திய அரசிதழில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் இதனை தெரிவித்தார்.

தற்காலிக தலைவர்...
இந்த நிலையில் காவிரி ஆணையம் அமைக்கும் உத்தரவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கையெழுத்திட்டுள்ளார். ஆணையத்தின் தற்காலிக தலைவராக நீர்வளத் துறை செயலாளர் யூ.பி.சிங் செயல்படுவார். ஆணையத்திற்கு நிரந்தர தலைவர் நியமனம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும், காவிரி மேலாண்மை வாரியக் குழுவும் அமைக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து