முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாட்டு நன்கொடைகளை கண்காணிக்க இணையதள வசதி ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்தார்

சனிக்கிழமை, 2 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: வெளிநாட்டில் இருந்து வரும் நன்கொடைகளைக் கண்காணிக்கும் இணையதள வசதியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகள் வருகின்றன. இந்த நன்கொடைகளையும் அவைகளைப் பெற்றுக் கொள்ளும் அமைப்புகளையும் கண்காணிப்பதற்கான இணையதள வசதியை மத்திய அரசு தொடங்கி உள்ளது. டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த இணையதள வசதியை தொடங்கிவைத்தார்.

அப்போது அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் நன்கொடைகளைக் கண்காணிக்கும் இணையதள வசதியை மத்திய அரசின் பல்வேறு துறைகள், அமைச்சகங்களின் முக்கிய அதிகாரிகள் செயல்படுத்த முடியும். வெளிநாட்டு நன்கொடைகள், அவற்றை பெற்றுக்கொள்ளும் நிறுவனங்கள், ஆகியவை குறித்த விரிவான தகவல்களை அறிந்துகொள்ள முடியும். மத்திய அரசின் பதிவு பெற்ற அல்லது வெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி  செயல்படும் நிறுவனங்கள் இந்த நன்கொடைகளை பெறுகிறதா என்பதைக் கண்காணிக்க முடியும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து