முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் ரசிகர் சுதிருக்கு விருந்து கொடுத்த டோனி

சனிக்கிழமை, 2 ஜூன் 2018      விளையாட்டு
Image Unavailable

இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படுபவர் சச்சின் தெண்டுல்கர். இவரது தீவிர ரசிகர் சுதிர் கவுதம். இந்திய அணி விளையாடும் மைதானத்திற்குச் சென்று உடற்முழுவதும் இந்திய தேசியக் கொடியின் வண்ணத்தை பூசிக்கொண்டு சச்சின் பெயரை உடலில் எழுதிக் கொண்டு அவரை உற்சாகமூட்டுவார்.

ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணியின் கேப்டனாக டோனி செயல்பட்டபோதும், தற்போது விக்கெட் கீப்பராக செயல்படுகிற போதிலும் சுதிர் கவுதம் உற்சாகமூட்டி வருகிறார். இந்திய அணிக்கு உற்சாகமூட்டி வரும் சுதிர் கவுதமிற்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க டோனி முடிவு செய்தார். அதன்படி தனது பண்ணை வீட்டிற்கு சுதிர் கவுதரை அழைத்து விருந்து கொடுத்தார். அப்போது டோனியின் மனைவி சாக்சியும் உடன் இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து