முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியின் வாழ்த்து எங்களுக்கு தேவையில்லை ஆந்திர அமைச்சர் லோகேஷ் டுவிட்டரில் கருத்து

செவ்வாய்க்கிழமை, 5 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

அமராவதி: மாநில பிரிவினையால் நொந்து போயுள்ள எங்களுக்கு உங்கள் வாழ்த்து தேவையில்லை என ஆந்திர அமைச்சர் லோகேஷ் பிரதமர் மோடிக்கு தனது வருத்தத்தை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் பிரிந்து 4 ஆண்டுகள் ஆனதையொட்டி, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களுக்கும் பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஆந்திர முதல்வரின் மகனும் மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான லோகேஷ் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், மாநிலப் பிரிவினை முறைப்படி நடக்கவில்லை. இந்த விஷயத்தில் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதற்காக மத்திய அரசு மீது மக்கள் மிகுந்த மன வருத்தம் அடைந்துள்ளனர். அத்துடன் நஷ்டத்தை சந்தித்து கவலைப்பட்டு கொண்டிருக்கிறோம்.

இந்நிலையில், உங்களுடைய வாழ்த்து எங்களுக்கு வேண்டாம். இது மக்களை திருப்திப்படுத்தாது. அதற்கு பதில், மாநிலப் பிரிவினை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட 19 அம்சங்களையும் அமல்படுத்துங்கள். மாநில சிறப்பு அந்தஸ்து என்பது 5 கோடி ஆந்திர மக்களின் உரிமை. மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள் என அவர் அதில் பதிவிட்டுள்ளார். இத்துடன், பிரதமரின் வாழ்த்துக்கு அதிருப்தி தெரிவித்து பொதுமக்கள் சிலர் டுவிட்டரில் வெளியிட்டிருந்த கருத்துகளையும் அவர் இணைத்து பதிவேற்றம் செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து