முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி ஆணைய தலைவராக மசூத் உசேன் நியமனம்

புதன்கிழமை, 6 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, காவிரி ஆணைய தலைவராக மசூத் உசேன் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினையில் மேலாண்மை வாரியம் அமைக்க வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு இதை தாக்கல் செய்யாமல் தாமதப்படுத்தி வந்தது.

அதன் பின் பல முறை இழுத்தடித்து கடைசியாக திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. இதை ஏற்ற சுப்ரீம் கோர்ட் வழக்கை ஒத்திவைத்தது. மேலும் வரைவு திட்டத்தை உடனே அரசிதழில் வெளியிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. பருவமழை தொடங்குவதற்குள் மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து தற்போது காவிரி ஆணைய தலைவராக நீர்வளத்துறை ஆணையர் மசூத் உசேன் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து