முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் பகுதியில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல்

புதன்கிழமை, 6 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

ஜம்மு : ஜம்மு காஷ்மீர் மச்லி பகுதியில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

உளவுத்துறை தகவல்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குள் ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து பல்வேறு பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை மூலம் பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

3 பேர் சுட்டுக்கொலை

இந்தநிலையில் மச்லி பகுதியில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக வெளியான தகவலை அடுத்து தீவிர கண்காணிப்பு பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து