முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்தில் பிளாஸ்டிக் தடையால் பாதிப்பு

வெள்ளிக்கிழமை, 8 ஜூன் 2018      வர்த்தகம்
Image Unavailable

குஜராத் மாநிலத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதன் காரணமாக 2 ஆயிரம் சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் 50 ஆயிரம் பேர் வேலையிழப்பர் என்று குஜராத் பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் (ஜிபிஎம்ஏ) தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் வதோதரா, அகமதாபாத், ராஜ்கோட் உள்ளிட்ட நகரங்களில் பிளாஸ்டிக் உபயோகத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பிளாஸ்டிக் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இத்தொழிலை நம்பியுள்ளவர்கள் வேலையிழப்பர் என்று ஜிபிஎம்ஏ தலைவர் அல்பேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து