முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவிற்கு கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரசி மூடைகள் ரயில் நிலையத்தில் பறிமுதல்

செவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல்,- திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் கேரளாவிற்கு கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் இருந்து பாலக்காடு நோக்கி செல்லும் ரெயிலில் ரேஷன் அரசி மூடைகள் கடத்தப்படுவதாக உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதனையடுத்து நேற்று காலை 6.20 மணிக்கு  வந்த ரெயிலில் அதிகாரிகள் மற்றும் ரெயில்வே போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். 2வது வகுப்பு பெட்டியில் அவர்கள் சோதனை நடத்தியபோது அங்கு 34 மூடைகளில் ரேஷன் அரிசி மூடைகள் வைக்கப்பட்டிருந்தது. அந்த மூடைகளை அங்கிருந்த யாரும் உரிமை கொண்டாட வில்லை. இதனயைடுத்து ரெயில்வே போலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.
சமீபகாலமாக கேரளாவிற்கு ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் இச்சம்பவமும் நடந்துள்ளது. எனவே இதில் ஈடுபட்டவர்கள் யார்? எங்கிருந்து யாருக்கு கடத்தப்படுகிறது என்பது குறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து