முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானலில் அனைத்து மதத்தினர் பங்கு பெற்ற இப்தார் நோன்பு

புதன்கிழமை, 13 ஜூன் 2018      திண்டுக்கல்
Image Unavailable

கொடைக்கானல் -  கொடைக்கானலில் அனைத்து மதத்தினர் பங்கு பெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடந்தது.
 கொடைக்கானல் டவுன் பள்ளிவாசல் நிர்வாகிகள் சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினர் பங்குபெற்றனர். இந்த இப்தார் நிகழ்வில் கொடைக்கானலைச் சேர்ந்த அனைத்து கட்சியினரும் பங்கு பெற்றனர்.
இந்த இப்தார் நிகழ்ச்சிக்கு கொடைக்கானல் டவுன் பள்ளிவாசல் தலைவர் காஜா மைதீன் தலைமை தாங்கினார். செயலாளர் முஸ்தபா முன்னிலை வகித்தார். கொடைக்கானல் மறை வட்ட அதிபர் அருட்தந்தை எட்வின்சகாயராஜா, மாரியம்மன் கோவில் தலைவர் முரளி, கொடைக்கானல் அ.தி.முக. நகர செயலாளர் ஸ்ரீதர், முன்னாள் நகர் மன்றத்தலைவரும் தி.மு.க. நகரசெயலாளர் முகமது இப்ராகிம், ம.தி.முக. நகர செயலாளர் தாவுத், சன்பில்டர் ரவி, டாக்டர் இளம் வழுதி, தி.மு.க. மவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் அப்துல் கனிராஜா, நகர காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து