முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீன்பிடித் தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு: பாம்பன், ,ராமேசுவரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்கின்றனர்.

வியாழக்கிழமை, 14 ஜூன் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,- தமிழக கடலோரப்பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த மீன்பிடித் தடைக்காலம் இன்று நள்ளிரவோடு முடிவடைகிறது.ஆதலால் பாம்பன் பகுதி மீனவர்கள் நாளையும்,ராமேசுவரம் பகுதி மீனவர்கள் சனிக்கிழமையும்  மீன்பிடிக்க கடலுக்கு செல்கின்றனர்.
  ராமேசுவரம் உள்பட தமிழக கடலோரப்பகுதிகளில் கடலில் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்காகவும்,சுற்றுசுழலை பாதுகாக்கவும் தமிழக அரசு  ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் விதிக்கப்பட்டிருந்தது.இந்த தடைக்காலம் இன்று இரவு நள்ளிரவோடு முடிவடைகிறது. மன்னார் வளைகுடா  கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லும் பாம்பன் பகுதி மீனவர்கள் நாளை காலையில் 90 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்க செல்ல உள்ளனர்,அது போல சுழற்ச்சி முறையில் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சனிக்கிழமை மீன்பிடிக்க செல்லும் நிலை இருப்பதால் இப்பகுதி மீனவர்கள் சனிக்கிழமை அதிகாலையில் 720 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிக்க செல்ல தயாராக உள்ளனர்.ஆதலால் இரு பகுதி மீனவர்களும் மீன்பிடிக்க செல்வதற்கான மீன்பிடி சாதனங்களான  மீன்பிடி வலைகள்,மீன்களை சேகரித்து வைக்கும் பெட்டி,மற்றும் டீசல் ஆகிய பொருள்களை  சேகரித்து தயார் படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மீனவர்கள் 61 நாள்களுக்கு பின்பு மீன்பிடிக்க  செல்வதால் அதிக விலைக்கு வியாபாரிகள் வாங்கி செல்லும் இறால்,கணவாய்,நண்டு, பாறை,சீலா போன்ற பெரிய மீன் வகைகள் அதிக வரத்து வரும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.ஆதாலால் மீன்கள் கெட்டு போகாமல் பாதுகாத்து வைப்பதற்காக போதுமான ஐஸ் கட்டிகளை படகில் சேகரித்து வைத்து கொள்ளும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் ராமேசுவரம்  மீன்துறை அலுவலகத்தில் மீன்பிடிக்க  செல்வதற்காக அனுமதி சீட்டு வழங்கியவுடன்,அதை பெற்றுக்கொண்டு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்கின்றனர்.
   மீன்பிடி தடைக்காலம் முடிந்து சுழற்ச்சி முறை மீன்பிடிப்பால் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் முதல் நாள் மீன்பிடிக்க செல்லவி்லலை.
  ராமேசுவரம்,பாம்பன் ஆகிய பகுதிகளில் மீன்பிடி தொழில் செய்து வரும் மீனவர்கள்  பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சுழற்ச்சி முறையில் வாரத்தில் மூன்று நாள்கள் மீன்பிடிக்க சென்று வருவார்கள்.அதன் பேரில் பாக்ஜலசந்தி  கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லும் ராமேசுவரம் மீனவர்கள் வாரத்தில் திங்கள்,புதன்,சனி ஆகிய கிழமைகளில் மீன்பிடிக்க செல்வார்கள். வெள்ளிகிழமை ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் ஓய்வில் இருப்பார்கள். அதுபோல மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லும் பாம்பன் பகுதி மீனவர்கள் ஞயிறு, செவ்வாய்,வெள்ளி ஆகிய கிழமை களிலும் மீன்பிடிக்க செல்வார்கள்.இவர்கள் சனிக்கிழமை மீன்பிடிக்க செல்லாமல் ஓய்வில் இருப்பார்கள்.இந்நிலையில் 61 நாள்கள் மீன்பிடித்தடைக்காலம் வியாழக்கிழமை இன்று இரவு நள்ளிரவோடு முடிவடைவதால் பாம்பன் பகுதி மீனவர்கள் மட்டும் வெள்ளிக்கிழமை  காலையில் மீன்பிடிக்க செல்கின்றனர்.ராமேசுவரம் மீனவர்கள் 62 நாள்கள் கழித்து சனிக்கிழமை காலையில் மீன்பிடிக்க செல்கின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து