முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடிக்கு மக்கள் மீண்டும் வாக்களிப்பார்கள் மகராஷ்டிர முதல்வர் நம்பிக்கை

வெள்ளிக்கிழமை, 15 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: வரும் மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் மீண்டும் வாக்களிப்பார்கள் என மகராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பட்னாவிஸ், வாஷிங்டன் நகரில் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில், 67 ஆண்டுகளில் செய்யாத பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. ஏழை, நடுத்தர மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் கழிவறைகள் கட்டுவது, அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்குவது, அனைத்து கிராமங்களுக்கும் மின் வசதி, அனைவருக்கும் வீடு, சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மோடி தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் 2019-ல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் மீண்டும் வாக்களிக்கப் போகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து