முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவாஸ் ஷெரீப் மனைவிக்கு மாரடைப்பு லண்டன் மருத்துவமனையில் அனுமதி

சனிக்கிழமை, 16 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

லண்டன்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மனைவி குல்ஸும் நவாஸுக்கு  திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நவாஸ் ஷெரிப் மனைவி குல்ஸும் நவாஸுக்கு தொண்டையில் புற்றுநோய் இருப்பது கடந்த ஆண்டு கண்டறியப்பட்டது. இதையடுத்து, பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அண்மையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, குல்ஸூமுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டு சுயநினைவை இழந்தார். இதனைத் தொடர்ந்து, அதே மருத்துவமனையில் அவர் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மருத்துவர்கள் மாற்றினர். அங்கு அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து