முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேஷியாவில் பெண்ணை விழுங்கிய ராட்சத மலைப்பாம்பு வயிற்றைக் கிழித்து வெளியே எடுத்த மக்கள்

சனிக்கிழமை, 16 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

மக்காசார்: இந்தோனேஷியாவில் தோட்டத்துக்கு சென்ற பெண்ணை ராட்சத மலைப்பாம்பு உயிருடன் விழுங்கியது. அந்த பெண்ணை தேடிச் சென்ற உறவினர்கள், பாம்பின் வயிற்றைக் கிழித்து அந்த பெண்ணை சடலமாக மீட்டனர்.

இந்தோனேஷியாவின் முன்னா தீவில் உள்ள சுலாவெசி நகரில் பெர்சியாபென் லாவெலா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் வா திபா.  தனது தோட்டத்தில் காய்கறிகள் பறிப்பதற்காக வா திபா சென்றார். ஆனால், இரவு முழுவதும் திரும்பி வரவில்லை. இதையடுத்து அவரின் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும், வா திபாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக தோட்டத்துக்குச் சென்று அவரைத் தேடியபோது, அங்கு ராட்சத மலைப்பாம்பு ஏதோ இரையைத் விழுங்கி விட்டு நகர முடியாமல் படுத்திருப்பதை கிராம மக்கள் கண்டனர்.

ஒருவேளை திபாவை மலைப்பாம்பு விழுங்கி இருக்கலாம் என சந்தேகித்த கிராம மக்கள், அந்த ராட்சத மலைப் பாம்பைக் கொன்று, அதன் வயிற்றுப் பகுதியைக் கத்தியால் கிழித்துப் பார்த்து திபா சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வழக்கமாக ஆடுகள், கோழிகள், சிறு உயிரினங்களைத்தான் மலைப்பாம்புகள் அடித்துக் கொல்லும் எனக் கேட்டிருக்கிறோம். மனிதர்களை உயிருடன் விழுங்கும் எனக் கதைகளில் படித்திருக்கிறோம். ஆனால் இப்போதுதான் நேரடியாக பார்க்கிறோம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து