முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமலையில் மீண்டும் ஆயிரங்கால் மண்டபம் கட்ட ரோஜா வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

திருப்பதி: திருமலையில் இடிக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தை மீண்டும் கட்டவேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்காலிடம் எம்.எல்.ஏ ரோஜா மனு கொடுத்தார்.

திருமலையில் கோயிலுக்கு முன்பிருந்த பழங்கால ஆயிரங்கால் மண்டபம், கோயில் விரிவாக்கப்பணி காரணமாக இடிக்கப்பட்டது. இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அதே இடத்தில் ஆயிரங்கால் மண்டபம் கட்ட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நகரி தொகுதி எம்.எல்.ஏ நடிகை ரோஜா, நேற்று தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்காலை சந்தித்து மனு அளித்தார்.

பின்னர் அவர் கூறும்போது, ‘‘ஏழுமலையான் கோயிலுக்கு முன்பிருந்த பழங்கால ஆயிரங்கால் மண்டபத்தை கட்ட வலியுறுத்தி மனு கொடுத்தேன். ஆந்திர மாநிலத்தில் கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை பலர் அபகரித்துள்ளனர். இந்த நிலங்களை மீட்க நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து