முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி ஏழுமலையான் ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ3.43 கோடி வசூலானது

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

திருப்பதி:  திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ3.43 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருமலைக்கு வரும் பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்த பின் தங்களால் இயன்ற காணிக்கைகளை உண்டியல் மூலம் செலுத்தி வருகின்றனா்.

அதன்படி வியாழக்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை மாலை வரை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை கணக்கிட்டதில் மொத்தம் ரூ3.43 கோடி வசூலானது.

ரூ.16 லட்சம் நன்கொடை: ஏழுமலையானின் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறறக்கட்டளைகளுக்கு பக்தா்கள் தங்களால் இயன்ற நன்கொடையை அளித்து வருகின்றனா்.

அதன்படி வெள்ளிக்கிழமை ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம், வேதபரிரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ.2 லட்சம், உயிர்காக்கும் அறக்கட்டளைக்கு ரூ.3 லட்சம், சீனிவாச சங்கர நேத்ராலயா அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம்என ரூ.16 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து