முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் ஏழை, எளிய மக்களுக்கு பெரும் சுமை - ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 18 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : லாரி உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளான டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்வதை நிறுத்தவும், பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தவும், நீண்ட காலமாக சுங்கக்கட்டணம் வசூலித்து வரும் சுங்கச்சாவடிகளை மூடவும் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,

லாரி உரிமையாளர் சம்மேளனத்தினரின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து, பொதுமக்கள் மீது சுமை ஏற்றப்படுகிறது. டீசல் விலை உயர்வாலும், சுங்கக்கட்டண உயர்வாலும் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும் சரக்குகளின் விலை உயருகிறது. இதனால் அத்தியாவசியமான காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு உணவுப்பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே போகிறது. இப்படி விலைவாசி உயர்வது ஏழை, எளிய மக்களுக்கு பெரும் சுமையாக அமைகிறது. எனவே மத்திய அரசு லாரி உரிமையாளர்களின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்து, பேச்சுவார்த்தை நடத்தி, சுமூகத்தீர்வு ஏற்படுத்தி தர உறுதியான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று ஜி.கே.வாசன் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து