முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் 30 ஆயிரம் ரெயில் பெட்டிகளுக்கு புதிய வண்ணம் பூசப்படுகிறது

திங்கட்கிழமை, 18 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, நாடு முழுவதும் 30 ஆயிரம் ரெயில் பெட்டிகளுக்கு புதிய வண்ணத்திற்கு மாற்றப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் தெவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள ரெயில் பெட்டிகளின் வர்ணத்தை மாற்ற ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. தற்போது ரெயில்களில் நீலம் வண்ணம் பூசப்பட்டு இருக்கிறது. இதனை மாற்றி விட்டு இருண்ட பழுப்பு நிறம் மற்றும் இளம் பழுப்பு நிறம் ஆகிய 2 வண்ணங்களை பூச திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக வடக்கு ரெயில்வேக்கு உட்பட்ட டெல்லி-பதர்கோட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் உள்ள 16 பெட்டிகளுக்கு புதிய வண்ணம் பூசப்படுகிறது. இந்த புதிய வண்ணம் மாற்றும் திட்டம் அதனை தொடர்ந்து தெற்கு, மத்திய, கொங்கன் உள்ளிட்ட அனைத்து ரெயில்வேக்கும் செயல்படுத்தப்படும். 30 ஆயிரம் ரெயில் பெட்டிகளுக்கு புதிய வண்ணம் படிப்படியாக பூசப்படும். ராஜ்தானி, சதாப்தி, தூரந்தோ ஆகிய ரெயில்களை தவிர மற்ற அனைத்து ரெயில் பெட்டிகளும் புதிய வண்ணத்திற்கு மாற்றப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் தெவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து