எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மயிலாடுதுறை : தி.மு.க.வின் செயல்படாத தலைவர் (ஸ்டாலின்) செயல்படக் கூடிய இந்த அரசை குறை கூறுகிறார். காவிரி விவகாரத்தில் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்தது தி.மு.க.வும், கருணாநிதியும்தான் என்று மயிலாடுதுறையில் நடந்த காவிரி நதிநீர் போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பேசினார்.
காவிரி பிரச்சினையில் பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி அதில் வெற்றி கண்டவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கெஜட்டில் வெளியிடச் செய்ததும் அவரே. இது தனது 30 ஆண்டு கால அரசியல் வாழ்வில் தனக்கு கிடைத்த வெற்றி என்று அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அவரது வழியில் செயல்படும் அ.தி.மு.க. அரசு தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்தையும், காவிரி ஒழுங்குமுறை குழுவையும் அமைத்து வெற்றி கண்டுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் வெற்றி விளக்க கூட்டங்களை நடத்துமாறு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமது கட்சியினருக்கு உத்தரவிட்டிருந்தனர். அதன்படி தமிழகம் முழுவதும் வெற்றி விளக்க கூட்டங்கள் நடந்து வருகின்றன.
மயிலாடுதுறையில் பொதுக்கூட்டம்
இந்நிலையில் நேற்று நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி நதிநீர் போராட்ட வெற்றி விளக்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் மயிலாடுதுறை சென்ற போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வரை அமைச்சர்கள் ஓ.எஸ். மணியன், துரைக்கண்ணு மற்றும் பாரதிமோகன் எம்.பி. உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். அதன் பிறகு நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது,
1970-ம் ஆண்டிலேயே காவிரி பிரச்சினை உருவெடுத்தது. அதற்கு அடுத்த ஆண்டு அதாவது 1971-ல் அப்போதைய தி.மு.க. அரசு சட்டமன்றத்திலும், சட்ட மேலவையிலும் தீர்மானம் நிறைவேற்றி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள். ஆனால் 1972-ம் ஆண்டிலேயே அந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டார்கள். அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையார் கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்த வழக்கை கருணாநிதி வாபஸ் பெற்றார். அப்போதே விவசாயிகளை ஏமாற்றியவர் கருணாநிதி. இந்த வழக்கை தொடர்ந்து நடத்தியிருந்தால் காவிரி பிரச்சினைக்கு அப்போதே தீர்வு ஏற்பட்டிருக்கும். ஏன் வழக்கை வாபஸ் பெற்றீர்கள். ஆக, மக்களை பற்றி கவலைப்படாத அரசாக தி.மு.க. அரசு இருந்தது. அதன் பிறகு விவசாயிகள் சங்கம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. 1986-ல் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். நடுவர் மன்றம் அமைக்க கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். நடுவர் மன்றம் அமைக்கப்பட்டதே அவரது முயற்சியால்தான். அவரது மறைவுக்கு பிறகு அம்மா (ஜெயலலிதா) பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தினார். அதன் பலனாக நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு கெஜட்டில் வெளியிடப்பட்டது. மத்தியிலும், மாநிலத்திலும் தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்தார்கள். இவர்கள் காவிரி பிரச்சினையில் என்ன நடவடிக்கையை எடுத்தார்கள். அழுத்தம் கொடுக்கவில்லை என்று எங்களை சொல்லும் நீங்கள் காவிரி பிரச்சினையில் என்ன அழுத்தம் கொடுத்தீர்கள்.
துரோகம் இழைத்தது தி.மு.க.
ஆக, காவிரி பிரச்சினையில் துரோகம் இழைத்தது தி.மு.க.வும், அதன் தலைவர் கருணாநிதியும்தான். ஆனால் அ.தி.மு.க. அரசு அப்படியல்ல. நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட 22 நாட்கள் அ.தி.மு.க. எம்.பி.க்கள் காவிரி பிரச்சினைக்காக உரிமைக்குரல் எழுப்பினார்கள். அதை மறக்க முடியுமா? நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்படும் அளவிற்கு நமது எம்.பி.க்கள் அங்கே அழுத்தம் கொடுத்தார்கள். தி.மு.க. அமைச்சர்கள் அதை செய்தார்களா? அப்படி செய்திருந்தால் விடிவுகாலம் பிறந்திருக்குமே! சுய லாபத்திற்காக பதவியில் இருந்தவர்கள் தி.மு.க.வினர்.
செயல்படாத தலைவர்
தி.மு.க.வின் செயல்படாத தலைவர் (ஸ்டாலின்) செயல்படக் கூடிய இந்த அரசை குறைகூறுகிறார். இவரெல்லாம் செயல் தலைவரா? அன்றைய முதல்வர் ஜெயலலிதா காவிரி பிரச்சினைக்காக அன்றைய பிரதமர் மன்மோகன்சிங்கை பலமுறை சந்தித்தார். ஆணையம் அமைக்க கோரி பல கடிதங்களை எழுதினார். நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்ததும் அம்மாதான். அதனால் அவருக்கு பிரம்மாண்ட பாராட்டு விழா நடைபெற்றது. பொன்னியின் செல்வி என்று அவருக்கு பட்டம் கொடுத்தார்கள். ஆக, காவிரி பிரச்சினையில் கிடைத்த வெற்றியில் அ.தி.மு.க.வுக்கு பெரும் பங்கு உள்ளது. காவிரி பிரச்சினையை தீர்த்த அரசு அ.தி.மு.க. அரசு. உச்சநீதிமன்ற ஆணைப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு அது அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆணையத்திற்கான உறுப்பினர்களையும் தமிழகம், கேரளம், புதுச்சேரி அரசுகள் வெளியிட்டு விட்டன. ஆனால் கர்நாடகம் மட்டும் உறுப்பினர் பெயரை வெளியிட மறுக்கிறது. அதனால்தான் டெல்லி சென்ற நான் காவிரி ஆணையத்தை கூட்ட வேண்டும். எங்களுக்குரிய தண்ணீரை பெற்றுத்தர வேண்டும் என்று பிரதமரிடமும், நிதின் கட்காரியிடமும் வலியுறுத்தினேன். 14 ஆண்டுகள் தி.மு.க. ஆட்சியில் இருந்தது. காவிரி பிரச்சினைக்காக இவர்கள் போராட்டம் நடத்தினார்களா? ஆனால் மறைந்த முதல்வர் அம்மா இப்பிரச்சினையில் நடவடிக்கை கோரி 4 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். விவசாயிகளின் உரி்மைக்காக போராடும் அ.தி்.மு.க. அரசு. இந்த விஷயத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கூட நாங்கள் தொடர்ந்தோம். ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்காவிட்டால் போராட்டம் நடத்துவேன் என்கிறார் ஸ்டாலின். அணையில் நீர் இருந்தால்தானே திறக்க முடியும். தண்ணீரை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறார் ஸ்டாலின். யார் ஆட்சியில் இருந்தாலும் தண்ணீர் இல்லாமல் அணையை திறக்க முடியாது. இவ்வாறு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. ஆட்சியில் ஜூன் 12-ம் தேதியை தாண்டி தண்ணீர் திறந்து விடப்பட்ட நாட்களின் பட்டியலை குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகம் உணவு உற்பத்தியில் முதலிடம் வகிப்பதை சுட்டிக் காட்டினார். சிறு, குறு விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை ரத்து செய்தது அ.தி.மு.க. ஆட்சிதான் என்று குறிப்பிட்ட முதல்வர், நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன் என்பதால் விவசாயிகள் நிலை எனக்கு தெரியும் என்றும் குறிப்பிட்டார். தமிழகத்தில் நடந்து வரும் குடிமராமத்து பணிகளையும் குறிப்பிட்ட அவர், அதற்காக இந்த ஆண்டு ரூ. 328 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டினார். மேட்டூர் அணையை திறக்க முடியாத காரணத்தால்தான் குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். விவசாயிகளின் நலன் காக்கும் அரசு அ.தி.மு.க. அரசு. விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிய அரசு அ.தி.மு.க. அரசு. காப்பீட்டு திட்டம் மூலம் பல்வேறு நலன்களை அவர்களுக்கு வழங்கியது அ.தி.மு.க. அரசு என்று கூறிய அவர், நிலத்தடி நீரை உயர்த்த அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார். கல்வித்துறை, மருத்துவத் துறையில் அரசு செய்த சாதனைகளை அவர் பட்டியலிட்டார். மின்சார உற்பத்தியில் அ.தி.மு.க அரசு செய்த சாதனைகளையும் முதல்வர் பட்டியலிட்டார். இந்த கூ ட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த அமைச்சர் ஓ.எஸ். மணியனுக்கு முதல்வர் தனது பாராட்டுகளை தெரிவித்தார். முன்னதாக மயிலாடுதுறை செல்லும் வழியில் அவருக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, முன்னாள் அமைச்சர் சிவபதி உள்ளிட்ட பலரும் முதல்வரை வரவேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
வயநாடு தொகுதிக்கு ராகுல் செய்தது என்ன? பிரசாரத்தில் அண்ணாமலை கேள்வி
24 Apr 2024திருவனந்தபுரம், வயநாடு தொகுதிக்கு என்ன செய்தேன் என ராகுல் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.