எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகம் முழுவதும் மின்சாரம் தாக்கி இறந்த 18 பேரின் குடும்பத்திற்கு ரூ.54 லட்சம் நிதி உதவி வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:-
காஞ்சிபுரம் - நாமக்கல்
கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டம், கொமாரபாளையம் கிராமத்தைச் சேர்ந்த முகம்மது ஷெரிப் மின்பராமரிப்பு பணி மேற்கொள்ளும்போதும், காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம், தேன்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தண்டபானி அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கியும், காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்தூர் வட்டம், மணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் பணி செய்யும்போது மின்சாரம் தாக்கியும், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், அரசமலை சரகம், நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மின் கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போதும், நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், புதுக்கோட்டை கிராமம், காளிசெட்டிபட்டி புதூரைச் சேர்ந்த சரோஜா அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கியும், அரியலூர் மாவட்டம் மற்றும் வட்டம், மேலக்காவட்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராசுவின் மனைவி சத்தியப்பிரியா வயலில் இருந்து புல்கட்டு தூக்கி வரும்போது மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,
தஞ்சாவூர் - விழுப்புரம்...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், உள்ளுர் கிராமம், கொரநாட்டுக்கருப்பூரைச் சேர்ந்த ஆனந்குமாரின் மகன் தமிழழகன் நீர்தொட்டியின் மின்சார பொத்தானை தொட்டபோது மின்சாரம் தாக்கியும், காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டம், மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ச்சுனனின் மகன் சுப்பிரமணி விவசாய நிலத்திற்கு நீர் பாய்ச்ச சென்றபோது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கியும், கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், நட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த ஹரிதாஸின் மின்சார கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கியும், விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், பொற்படாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த வீரமணியின் மகள் தர்ஷினி மின்சாரம் தாக்கியும், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருப்புறம்பியம் கிராமத்தைச் சேர்ந்த பேச்சிமுத்துவின் மகன் பொன்னுசாமி வயலில் உள்ள மின் மோட்டார் கம்பியை தொட்டபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,
ராமநாதபுரம் - நெல்லை...
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், கோவிலாங்குளம் உள்வட்டம், பூமாவிலங்கை கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் கணேசன் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கியும், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், வீரக்கல் கிராமம் உட்கடை நாகப்பன்பட்டியiச் சேர்ந்த வெங்கட்ராமனின் மகன் வினோத்குமார் வேப்ப மரத்தில் ஏறி ஆடுகளுக்கு தழைகள் பறித்துக்கொண்டிருந்தபோது அவ்வழியே செல்லும் உயர்மின் அழுத்த மின்சார கம்பியை தொட்டபோது மின்சாரம் தாக்கியும், திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், கொடிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவத்தேவரின் மகன் புதியவன் வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,
கிருஷ்ணகிரி - கடலூர்...
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், ஆர். புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த எல்லப்பன் மகன் பசுபதி ஊராட்சிக்கு சொந்தமான ஆழ்துளைக் கிணற்றை சரிசெய்யும் பணியின் போது, மின்சாரம் தாக்கியும், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், மாவத்தூர் கூட்டுரோட்டைச் சேர்ந்த மாணிக்கத்தின் மகன் ராஜேந்திரன் என்பவர் வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கியும், கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், அரங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகன் பிரஷாந்த் என்பவர் வயலுக்கு நீர் பாய்ச்ச சென்றபோது மின்கம்பத்திலிருந்து மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியும், திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம், ஏரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் மகன் பிரபு பழனி வட்டம், முத்துநாகக்கன்பட்டி கிராமத்தில் மின் மோட்டார் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
தலா ரூ.3 லட்சம்...
இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 18 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவங்களில் உயிரிழந்த 18 நபர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.