முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீர் வரத்து அதிகரிப்பு: 45 அடியை எட்டியது வைகை அணை நீர் மட்டம்

புதன்கிழமை, 20 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

கூடலூர்: நீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக வைகை அணை நீர் மட்டம் 45 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 856 கன அடி தண்ணீர் வருகிறது.

நீர் திறப்பு
கேரளாவிலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதியிலும் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. அணையின் நீர் மட்டமும் கணிசமாக உயர்ந்து வருவதால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் வைகை அணையின் நீர் மட்டத்தை உயர்த்தவும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

44 அடியை எட்டியது
இதனால் வைகை அணையின் நீர் மட்டம் நேற்று 44.23 அடியை எட்டியது. அணைக்கு 856 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 1324 மில்லியன் கன அடியாக உள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 127.10 அடியாக உள்ளது. வரத்து 1408 கன அடி. திறப்பு 1400 கன அடி. இருப்பு 4072 மில்லியன் கன அடி. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 41.20 அடி. சோத்துப்பாறை நீர் மட்டம் 124.94 அடி. பெரியாறில் 15, தேக்கடியில் 7 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து