முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 13 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

வெள்ளிக்கிழமை, 22 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: சாலை விபத்து மற்றும் தீவிபத்துக்களில் உயிரிழந்த 13 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நிலக்கோட்டை...
திருப்பூர் மாவட்டம், திருப்பூர் தெற்கு வட்டம், வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜம்மாளின் மகன். சௌந்திரபாண்டி மற்றும் அவரது மருமகள் முத்துலட்சுமி ஆகியோர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார்கள் என்ற செய்தியையும், தேனி மாவட்டம் தப்புகுண்டு கிராமம் தாடிச்சேரியைச் சேர்ந்த தேவியின் கணவர் செந்தில்குமார், திருப்பூர் தெற்கு வட்டம் கருவம்பாளையம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

புதுக்கோட்டை...
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம் கல்லாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கணேசனின் மகன் சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி பத்மா ஆகியோர் சாலை விபத்தில் உயிரிழந்தார்கள் என்ற செய்தியையும்,  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் எல்.என்.புரத்தைச் சேர்ந்த ரவியின் மகன் கார்த்திகேயன் நானாகுடி வளைவின் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும், கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் ஊஞ்சவேலாம்பட்டி கிராமத்தை  சேர்ந்த காளியப்பகவுண்டரின் மகன் காளிங்கராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

திருநெல்வேலி...
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம் அடங்கார்குளம் கிராமத்தை சேர்ந்த சுசீலாவின் கணவர் முருகேசன் உப்பிலிப்பாடி குளத்தில் மீன் பிடிக்க சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், புதுக்கோட்டை மாவட்டம்  கறம்பக்குடி வட்டம் ரெகுநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகன் வீரராகவன் குளத்தில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பரங்கிப்பேட்டை கிராமத்தை சேர்ந்த முகமது ஹனிபாவின் மகன் எம். இலியாஸ் கடலில் மூழ்கிய வேறு ஒரு நபரை காப்பாற்ற முற்பட்ட போது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

கோயம்பத்தூர்...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் நம்பிவயல் கிராமத்தைச் சேர்ந்த முருகனின் மனைவி விஜயசாந்தி மின்கசிவு காரணமாக தனது கூரை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும், காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் வட்டம்  தாம்பரம் நகரைச் சேர்ந்த ஜெயராமனின் மகன் கௌதம் தரைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும், கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை வட்டம் அட்டகட்டி பகுதியை சேர்ந்த மனோகரனின் மகள் மோனிகா சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

தலா ரூ.1 லட்சம்
இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இச்சம்பவங்களில் உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து